Monday , June 16 2025
Breaking News
Home / Help2Help / இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…
MyHoster

இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இந்த இரத்ததான குழுவை விளம்பரப்படுத்த முடிவு செய்து தன்னையும் ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பில் இணைத்துக் கொண்ட வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்கள், அவர்களது பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் போஸ்டர் அடித்து ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

Thiru. Giri – Velliyangiri Bus Owner

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் பேருந்தில் இது போன்ற விழிப்புணர்வு செய்து மக்களுக்கு விரைவாக சென்றடையும் வகையில் செய்துள்ளார்.

இந்த நிகழ்வை செய்த வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்களுக்கு ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Help 2 Help Blood Donors Group

இளைஞர் குரல் சார்பாக ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பினருக்கும் வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு கிரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES