Monday , June 16 2025
Breaking News
Home / செய்திகள் / அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக பாராட்டு.!
MyHoster

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக பாராட்டு.!

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக நிர்வாகிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வீராங்கனை ஜொ்லின் அனிகா. மாநில, தேசிய மற்றும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று 6 தங்க பதக்கங்களை பெற்ற அவர் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வானார்.


இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, அவனியாபுரத்தில் உள்ள வீராங்கனை ஜெர்லின் அனிகா இல்லத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் அவர்களின் தலைமையிலும், வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் முன்னிலையிலும், மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில இணைச் செயலாளர் டாக்டர் ஜெகநாதன், மாநில மகளிரணி துணைத்தலைவி குரு லட்சுமி கஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் முருகேசபாண்டி, சின்னச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மாணிக்கராஜ், ஒருங்கிணைந்த மகளிரணி மாவட்ட தலைவி சங்கரேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்முருகன், பழனிவேல், மணிகண்ட பிரபு, மாவட்ட ஆலோசகர்கள் ராமன், ஆறுமுகம், இணைச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES