Monday , December 15 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் மத்திய அரசு ஜவுளி துறை, கைவினைப் பொருட்கள் துறை மற்றும் பெட்கிராட் சார்பாக 50 பேருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது
MyHoster

மதுரையில் மத்திய அரசு ஜவுளி துறை, கைவினைப் பொருட்கள் துறை மற்றும் பெட்கிராட் சார்பாக 50 பேருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது

மத்திய அரசு ஜவுளி துறை, கைவினைப் பொருட்கள் துறை மற்றும் பெட்கிராட் சார்பாக 50 பேருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது

மதுரை,ஆக.28-

மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள கே.பி.எஸ் திருமண மண்டபத்தில் மத்திய அரசு ஜவுளி துறை, கைவினைப் பொருட்கள் துறை மற்றும் பெட்கிராட் சார்பாக ஹேண்ட் எம்பிராய்டரிங் பெண் கைவினை கலைஞர்களுக்கு பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையில், கைவினை பொருட்கள் துறை மண்டல இயக்குனர் பிரபாகரன், உதவி இயக்குனர் ரூப்சந்தர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் 50 பேருக்கு இலவச தையல் மிஷின்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் கதர் கிராமத்துறை ஆணையம் மண்டல இயக்குனர் அசோகன், மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், துணை பொது மேலாளர் ஜெயா, பூம்புகார் மேலாளர் மனோகரன், அலுவலர் திருமதி திலகவதி,மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஸ்ரீ சக்ரா நிர்வாக இயக்குனர் சுரேஷ், தங்கப்பல் அழகர்சாமி-லட்சுமி அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள் புஷ்பம்சந்திரன், ஏ.பி.குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, மார்ட்டின்லூதர்கிங், இந்திரா,ஜெயலட்சுமி, சுந்தரமூர்த்தி, ராதா, ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES