Saturday , April 19 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!
MyHoster

மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!

சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது.

மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் மற்றும் உணவு வகையில் பற்றிய கருத்தரங்கள்,150 மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.


மேலும் உலக சித்தர்கள் கூட்டமைப்பின் தலைவராக-சிவயோகி அனுகூலநாதர் ராஜசேகர சுவாமிகள், துணைத் தலைவராக திருமுருகன்,செயலாளராக-
க.செல்வவேல்பாண்டி, துணைச் செயலாளராக டாக்டர் கஜேந்திரன், இணைச் செயலாளராக-
செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளராக ரமணன்,இணைப் பொருளாளராக-
ஹரிஹரன், செயற்குழு உறுப்பினர்கள்
சிமியோன்,மணிகண்டன், ஆறுமுகம், கோவிந்தராஜு, மாரிமுத்து, முருகேசன் அலாவுதீன் ஆகியோர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES