Thursday , April 24 2025
Breaking News
Home / செய்திகள் / திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்
MyHoster

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்,அக்.22-

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது.

மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார்.


நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு இலவச கல்வி அளிப்பது, கல்வி அளிப்பது, மகளிருக்கு சுயசார்பு தொழில் முனைவு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, சட்ட உதவிகள் வழங்குவது, புதிய நிர்வாகிகள் நியமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணி தலைவர் வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம். கல்வி குழுமத் தலைவர் சங்கர், நாமக்கல் மருத்துவ குழுமத் தலைவர் டாக்டர் குழந்தைவேல், காரைக்கால் ராகவேந்திரா கல்வி குழுமத் தலைவர் இளங்கோ, ஈரோடு நுாட்பாலை உரிமையாளர் அருண், டாக்டர்கள் பழனியப்பன், ராஜவேல், வழக்கறிஞர் பிரிவு தலைவர் கற்பக ரத்னபிரியா, அபுதாபி தமிழ்சங்க நிர்வாகி சிவக்குமார், திருப்பூர் நெசவு தொழிற்காலை உரிமையாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்….

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES