
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை.
இராமநாதபுரம்,அக்.30-
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுமன்,மாநில மகளிரணி தலைவி விஜி, மதுரை மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வசவபுரம் கணேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.