Saturday , April 19 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி
MyHoster

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி

தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு அனைத்து மத்திய சிறைகளிலும் தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கூறியுள்ளார்

அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் JK பென்னர் நிறுவனம் மற்றும் பியர்ஸ் ஹியூமன் சைல்டு சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் இணைந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரை மத்திய சிறையில் உள்ள 30 தண்டனை சிறைவாசிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய வெல்டிங் பயிற்சி வழங்குவதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் .சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் JK பென்னர் மனித வள மேம்பாடு நிர்வாகி இக்னேசியஸ்
JK பென்னர் நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலர் வீராச்சாமி
பியர்ஸ் டிரஸ்ட் இயக்குனர் காட்டுச்சாமி ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சின்ன கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்

30 நாட்கள் நடைபெறும் இந்த தொழிற் பயிற்சி நிறைவு நாளில் அவர்களுக்கு மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் செயல்படும் ஸ்கில் இந்தியா திட்டத்தில் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்
மேலும் 30 நாட்களுக்கு ஒரு நபருக்கு ரூபாய் 1000 வீதம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது

மேலும் இப்பயிற்சி முடிவுற்றபின் தகுதியான சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கார்பெண்டர் மற்றும் மோட்டார் ரீவைண்டிங் டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES