Saturday , June 14 2025
Breaking News
Home / செய்திகள் / கரூர் MP சகோதரி ஜோதிமணி அவர்கள் முயற்சியால், பஞ்சந்தாங்கி புதூர் மலை கிராமத்தில் மூன்றே மணி நேரத்தில் மின்சாரம்…
MyHoster

கரூர் MP சகோதரி ஜோதிமணி அவர்கள் முயற்சியால், பஞ்சந்தாங்கி புதூர் மலை கிராமத்தில் மூன்றே மணி நேரத்தில் மின்சாரம்…

5 மாதங்களுக்கு முன்னாள் அய்யலூர் பேரூராட்சி கிழக்கே கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் மலைகிராமங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். ஏழு பெண்கள் குடிநீர் தேவைக்காக அடிபம்பு மூலம் தண்ணீர் பிடித்து கொண்டு MP அவர்களிடம் பெண்களும் ஓடி வந்து மின் பவர் மோட்டார் வைத்து சின்க்டெஸ் வையுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா என்றதும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிதி மூலம் கருப்பு சின்டெக்ஸ் மற்றும் மின்பவர் மோட்டார் அமைத்து தருகிறேன் என்றார்கள்.

YouTube player

கூறிய வாக்குபோல் வைத்து எல்லா வேலைகள் முடித்ததும் பெரிய சிக்கல் மின்சாரம் வாங்க நத்தம் செந்துறை மின்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. என்ன செய்வது என்று திரு திருவென்று முழித்த வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், காசிபாளையம் சாமிநாதன் அண்ணா அவர்களிடம் வாட்ஸாப்ப் தகவல் கூறவே, கரூர் MP அவர்களுக்கு தகவல் எட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அக்கா ஜோதிமணி அவர்கள் தொலைபேசி மூலம் பேசியதும், மூன்றே மணி நேரத்தில் கம்பத்தில் மின்சாரம் கொடுத்து போட்டோக்கள், MP அக்கா ஜோதிமணி அவர்கள் வாட்ஸாப்ப் நம்பர்க்கு அனுப்பபட்டது. பஞ்சந்தாங்கி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மின்பவர் மூலம் குடிநீர் வழங்கிய மிக்க மகிழ்ச்சியும் என்றாலும், பின்னோட்டமோ கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் முயற்சியும்தான்.

மூன்றே மணி நேரத்தில் நடந்தது கூடுதல் மகிழ்ச்சி மக்களுக்கு…

இவண்,
வேடசந்தூர் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பு அணி

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES