Tuesday , December 16 2025
Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா…!
MyHoster

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், விஜய் நர்சரி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு, Rtn S. சத்யபால், Rtn கார்த்திகேயன், Rtn உதயகுமார் சார்பில் நோட் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் அய்யா சாமி செல்வம் தலைமையில் , செயலாளர் R.R. பாபு வரவேற்பு ஆற்றினார்.
மயிலாடுதுறை உதவி காவல் ஆய்வாளர் இராகவ சிவா தலைமையில் விழா நடைபெற்றது.


விழாவில் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகத்தான பூமியை காக்கும் பணியில் ஞாயிறு தோறும் மரக்கன்றுகள் வைத்த 60,சமூக ஆர்வலர்களும் இயற்கை காவலர்
என்ற பட்டம் சூட்டி சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கப்பட்டது.

கூட்டமைப்பு மேலாண்மை குழு உறுப்பினர், பேராசிரியர்.துரை. குணசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன் மற்றும்
ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பொருளாளர் உதயகுமார்,
மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மேலாண்மை குழு , செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்து நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


முடிவில் செய்தி தொடர்பாளர் G.B. கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES