
மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பாலரெங்காபுரம் மண்டல் 165 வது பூத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே.கே.ரவி, 165-வது பூத் கிளைத் தலைவர் எம்.ஏ.டி சேகரன் மற்றும் மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.