
மதுரை மதிச்சியம் ஆசாரி தோப்பு பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு வட்ட கழகப் பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம் எல் ஏ ஆழ்வார்புரம், மதிச்சியம், கரும்பாலை, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
அவர்களுக்கு ஆசாரித்தோப்பு பகுதியில் மாநகர் தெற்கு 1-ஆம் பகுதி 30 வது வார்டு வட்டக் கழகப் பிரதிநிதி மகாபாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன் பகுதி செயலாளர் எம்.எஸ். செந்தில்குமார் மாணவர் அணி மாவட்ட செயலாளர் A.பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள், கார்மேகம், ரத்தினசாமி, பாம்சி கண்ணன், தக்காளி செந்தில்குமார், பிரகாஷ், முத்து, காளிதாஸ், மலைச்சாமி, முருகன், பாரதி தேவி உள்பட பலர் உள்ளனர்.