Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 20)

செய்திகள்

All News

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜர்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜர்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜரானார்.

சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜரானார். ஏற்கனவே கோவையில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

11ஜூலை இன்றைய தினம் உலக மக்கள்தொகை தினம் :

No photo description available.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் என்றால் அது இந்தியாவும் சீனாவும் தான்.

உலக மக்கள் தொகை 100 கோடியை எட்ட குறைந்தபட்சம் சில ஆயிரம் நூற்றாண்டுகள் ஆகும் என்றே 19ம் நூற்றாண்டில் முதலில் பலரும் கருதினர். ஆனால், வெறும் 200 ஆண்டுகளுக்குள், மக்கள் தொகை அதைவிட ஏழு மடங்கு அதிகரித்து உள்ளது.

உலக மக்கள்தொகை: கடந்த 2011ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 700 கோடியை எட்டியது. வரும் 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 850 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2050 ஆம் ஆண்டில் இது 970 கோடியையும் 2100இல் 1000 கோடியையும் இது தொடும் என்றே ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளன.

“இந்தியா அல்லது சீனா..” உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடு எது! மக்கள் தொகை சரிவதால் என்ன பிரச்னை

"இந்தியா அல்லது சீனா.." உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடு எது! மக்கள் தொகை சரிவதால் என்ன பிரச்னை

டெல்லி: இன்றைய தினம் உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் என்றால் அது இந்தியாவும் சீனாவும் தான்.

அதேநேரம் இந்த இரு நாடுகளில் எந்த நாட்டின் மக்கள் தொகை டாப்.. அதன் தற்போதைய மக்கள் தொகை என்ன.. வரும் காலத்தில் அது குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாகவே உலக மக்கள் தொகை படுவேகமாக அதிகரித்து வந்தது. மருத்துவ வசதிகள் மேம்பட்டது, அடிப்படை சுகாதாரத்தைப் பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியது ஆகியவை இதற்குக் காரணமாகும்..

உலக மக்கள் தொகை 100 கோடியை எட்ட குறைந்தபட்சம் சில ஆயிரம் நூற்றாண்டுகள் ஆகும் என்றே 19ம் நூற்றாண்டில் முதலில் பலரும் கருதினர். ஆனால், வெறும் 200 ஆண்டுகளுக்குள், மக்கள் தொகை அதைவிட ஏழு மடங்கு அதிகரித்து உள்ளது.

உலக மக்கள்தொகை: கடந்த 2011ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 700 கோடியை எட்டியது. வரும் 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 850 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2050 ஆம் ஆண்டில் இது 970 கோடியையும் 2100இல் 1000 கோடியையும் இது தொடும் என்றே ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளன.

மருத்துவச் சிகிச்சையால் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, கருவுறுதல் விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, வருமானப் பகிர்வு, வறுமை மற்றும் சமூக நலன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்தியா அல்லது சீனா: இதில் 142.86 கோடி மக்களைக் கொண்டு உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகச் சீனாவே உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் தான் சீனாவை ஓவர்டேக் செய்து இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற சாதனையைப் படைத்தது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, உயிரிழப்புகள் அதிகரிப்பது, அரிசின் பாசிலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலேயே சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இரட்டிப்பாகும்: இந்தியாவின் மக்கள்தொகை தற்போதைய விகிதத்தில், அதாவது ஆண்டுக்கு ஒரு சதவிகிதம் என்று தொடர்ந்தாலே, அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை இரட்டிப்பாகிடும் என்கிறது சர்வதேச அமைப்புகள்.. தற்போதைய மதிப்பில் இருந்து இரட்டிப்பாகும். அதேநேரம் 2050ம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல உலக மக்கள்தொகையும் மெல்லக் குறைய ஆரம்பிக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்: மக்கள்தொகை வளர்ச்சியை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஐநா முன்னெடுப்பின்படி 1987ஆம் ஆண்டு முதல் ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள்தொகை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்தாலும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் சரிவடைந்து வருகிறது.

பொதுமக்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பாத நிலையில், வேலை செய்யும் வயதில் உள்ள இளைஞர்கள் மக்கள் தொகை குறைகிறது. அதேநேரம் முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

நகராட்சிகளில் 5500 பேர் புதிதாக நியமனம்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

நகராட்சிகளில் 5500 பேர் புதிதாக நியமனம்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக் குறையைப் போக்க விரைவில் 5,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ,1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.05 லட்சம் பேருக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் ரூ,10 ஆயிரத்து 890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தவிர 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 11 ஆயிரத்து 872 கி.மீ. நீளமுள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டு, 4 ஆண்டுகளில் பணியை முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேக்கத்திடக்கழிவுகளை அகற்றி அந்த நிலங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரங்களை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டது. 41 உள்ளாட்சி அமைப்புகளில் மீட்கப்பட்ட நிலங்களில் இதுவரை 56 ஆயிரத்து 958 மரங்கள் நடப்பட்டு உள்ளது.

தாம்பரம், ஆவடி, கடலூர் மாநகராட்சிகள் மற்றும் மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 74 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி புறநகர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில், இதுவரை 43.09 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி 4-ல் முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.

3 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 387 கி.மீ. நீள சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொசஸ்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி 2,641 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, 669 கி.மீ. நீளப் பணிகள் நடைபெறுகின்றன. 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகிறது.

7.42 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. 100 பஸ் நிலைய பணிகள் நடைபெறுகின்றன. 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 86 இடங்களில் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

79 அறிவுசார் மையங்களுக்குக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 21 அறிவுசார் மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 681 பூங்கா அபிவிருத்தி பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 396 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறது.

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மின் மயானங்கள் அமைத்தல், நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை கட்டிங்கள் கட்டப்பட்டுள்ளன. 72 ஆயிரத்து 214 தனி நபர் கழிவறைகளும் 2,081 சமுதாயக் கழிப்பிடங்களும் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக் குறையைப் போக்க விரைவில் 5,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது” இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை

முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்தி அவர்களுக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள். அன்னை இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி அவர்களின் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே சென்னை மாநகரில் அன்னை இந்திரா காந்திக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தாங்கள் இந்த மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.May be a doodle of map and text

மா.கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

மா.கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைந்த துயரச் செய்தியறிந்து, பாலகிருஷ்ணன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். ராதாகிருஷ்ணனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்: "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் (66) நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சிதம்பரம் அண்ணாமலை நகர், திடல் வெளிப்பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த கே.ராதாகிருஷ்ணன் டீசல் ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்பட்ட அவரது மறைவு வேதனை அளிக்கிறது.

கே.ராதாகிருஷ்ணனுக்கு சங்கவி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கே.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது சகோதாரர் கே.பாலகிருஷ்ணன், மனைவி சங்கவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி!என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார்

Image
மல்லிகார்ஜுன கார்கே:

பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப்படாத கோவிட் லாக்டவுன் ஆகிய பேரழிவு முடிவுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி!

குடும்பங்களைச் சிதைத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் நாசம்! தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த மோடி அரசை எந்த
இந்தியனும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டான்.

PRக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், வெட்கமற்ற பொய்கள் மற்றும் அதிக டெசிபல் பிரச்சாரங்கள் மூலம் பெரும் மூடிமறைக்கும் நடவடிக்கை இருந்தபோதிலும், உண்மை வெளிவருவதற்கான போக்கு உள்ளது!

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலி. இங்கு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்துள்ள தகவலின்படி, காலை 7.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டராக இது பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மக்களே தெரிஞ்சிக்கோங்க..! வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி.? போலீசார் அறிவுரை.!!

மக்களே தெரிஞ்சிக்கோங்க..! வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி.? போலீசார் அறிவுரை.!!

போலீசார் அறிவுரை: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது .

இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது.

அதாவது, OTP மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும், SMS, லிங்குகளை நம்பி டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பணத்தை திருடும் முயற்சி நடப்பதாக உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrim.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு” – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

"அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு" - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: ‘குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் அளித்த பேட்டி: ‘எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?. காந்தியைக் கொலை செய்தீர்கள். எங்கள் நடத்தையை குற்றம் சொல்கிறீர்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவீர்களா!.

எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்துவிட்டு, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பற்றி பேசுகிறார். தமிழக பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை 32 பக்க உளவுத் துறை அறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்தக் கட்சியில் சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1977 வழக்குகள் உள்ளன.

என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா?. என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்.

அதன்பின்னர் முன்ஜாமீனில் கூட வெளிவர முடியாது. எனவே, அண்ணாமலை மன்னிப்புக் கேட்கும் வரை விடமாட்டோம். பாஜக மாநிலத் தலைவர் இப்படி அவதூறகப் பேசிய விவகாரத்தை இந்திய அளவில் மக்களிடம் கொண்டு செல்வோம். அண்ணாமலையின் வாழ்க்கை தற்போது காங்கிரஸ் கட்சியிடம் 

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES