Thursday , July 3 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
MyHoster

மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மதுரை தீக்கதிர் எதிர்ப்புறம் திருவள்ளுவர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பூசாரி தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருவள்ளுவர் நகரில் இருந்து விநாயகர் சிலை மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதில் அர்ச்சகர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ராமர், முத்துக்குமார், நீதிராஜன், சங்குமணி, முத்தையா, அஜித்குமார் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES