Thursday , November 20 2025
Breaking News
Home / செய்திகள் / முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்
MyHoster

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்காகவும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுகவுக்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் கே.எம். சரீப் அறிவுத்தலின்படி, அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களை மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ஜலால் முகமது தலைமையில் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

உடன் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாவட்ட தலைவர் எம்.எஸ்.கே.மல்லன், கவுன்சிலர் மாணிக்கம், இளைஞர் பாசறை செந்தில்குமார் உள்ளனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சையது யூசுப், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி,மாவட்ட துணைச் செயலாளர் மேத்தா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாம் உசேன் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES