Friday , November 21 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய கருத்தரங்கம்
MyHoster

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய கருத்தரங்கம்

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம்

மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய தமிழகத்தை மதராஸ் மாகாணம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டக்கோரி போராடி வெற்றி கண்ட ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன், பொன்.பாலகணபதி, பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள்,மதுரை மாநகர் கோட்ட பொறுப்பாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் சிறப்பாக செய்திருந்தார். மாவட்ட தலைவர்கள் தெய்வேந்திரன் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் வரவேற்று பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் தலைவர் மணிமாறன் நன்றியுரை கூறினார்.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES