Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 15)

செய்திகள்

All News

நீட் மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மோசடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

நீட் மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மோசடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

நீட் தேர்வுகளில் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும் மிகப்பெரிய மோசடி உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள், மத்திய அமைச்சர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. நீட் முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “பணம் இருந்தால் போதும்; இந்திய தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி . நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்சினை உள்ளது. நீட் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும், தேர்வு முறைகளில் சிக்கல் உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. மதிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். இந்த பிரச்சினையின் அடிப்படையை அவர் புரிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மத்திய அரசு, தேர்வு வினாத்தாள் கசிவில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள், மறுபக்கம் விசாரணையில் பல உண்மைகள் வெளியாகி பலரும் கைதாகி வருகிறார்கள். தர்மேந்திர பிரதான் மந்திரியாக நீடித்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றும்” கூறினார்.
இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தபோது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும். தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காது என அரசு உறுதியளிக்கிறது.

5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர். 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது. மக்களவையில் நீங்கள் கத்துவதால், அது உண்மையாகிவிடாது, நாட்டின் தேர்வு முறையே ஒரு மோசடி என்று கூறியிருக்கிறீர்கள், மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மிக மோசமான தகவலில் இதுதான் அதிகபட்சமாக இருக்கும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்; கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.

வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக திமுக அரசு உயர்த்தியது. 40944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர். பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219ஆக உயர்ந்துள்ளது. வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரித்துள்ளது. வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்காக ரூ .3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம்.

நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை அல்லது 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10000 வழங்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் 12 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். வணிகர் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வணிகத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தீ விபத்து மற்றும் இதயநோய், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. சேவை மனப்பான்மையோடு வணிகர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் ‘உருக்கமான’ வேண்டுகோள்.! காரணம் இதுதான்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை திருமதி.ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாக ரீதியிலும் பெயரை மாற்றம் செய்துள்ளார்.

சென்னையை அடுத்த பெரம்பூரில், கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஸ் என முன்னாள் அரசியல் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு, காலியாக இருந்த பகுஜன் சமாஜ்வாடி தமிழக தலைவர் பதவிக்கு, இன்று வழக்கறிஞர் ஆனந்தனை புதிய மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதே போல, மாநில ஒருங்கிணைப்பாளராக உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி ஆம்ஸ்ட்ராங்கை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ‘திருமதி.ஆம்ஸ்ட்ராங்’ என அழைக்குமாறு கேட்டுள்ளார். பொற்க்கொடி எனும் பெயரை அலுவல் ரீதியாக உபயோகப்படுத்தபோவதில்லை என்று அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின்னரும் அவரது பெயர் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று இந்த முடிவை திருமதி ஆம்ஸ்ட்ராங் எடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனி ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி பெறலாம்.! முழு விவரம் இதோ..

இனி ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி பெறலாம்.! முழு விவரம் இதோ..

கட்டட சான்றிதழ் : தமிழகம் முழுவதும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க உதவும் வகையில் கட்டட அனுமதியை ஆன் லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த கையோடு, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் வகையில், இன்று முதல் தமிழகத்தில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

  • இத்திட்டத்தின் படி https://onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.

கட்டடப் பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்றும் பெற வேண்டியதில்லை. உடனடியாக அனுமதி பெற WWw.onlineppa.tn.gov.in இணையதளம் மூலம் கட்டட அனுமதி பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்களுக்கு பரிசீலனை, உட்கட்டமைப்பு கட்டணங்களில் இருந்து 100% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பற்றி கீழ் காணலாம்.

மேலும், இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு

  1. https://onlineppa.tn.gov.in/user-manual-for-panchayat
  2. சுயசான்றிதழ் – pdf

எவ்வாறு கட்டட அனுமதி வளப்படுகிறது?

2,500 சதுர அடி வரையுள்ள மனையி த்தில், 3,500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ், கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் :

சுயசான்றிதழ் திட்டம் என்பது பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

கடைப்பிடிப்பதற்கு தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் எவ்வாறு பெறப்படுகிறது?

குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது.

பரிசீலனை மற்றும் தளர்வு :

அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது). கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல்(QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கௗ ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

வடசென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் மதுரை வடக்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று (22.07.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் எனது முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்.. ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறலாம்.. தொடங்கி வைத்த ஸ்டாலின்

எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்.. ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறலாம்.. தொடங்கி வைத்த ஸ்டாலின்

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.

ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆன்லைன் மூலம் ஆன்லைனில் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை.

தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் , சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அதாவது தொழில்நுட்ப வளர்சியின் படி கோப்புகளை அதிகளவில் குவிப்பதை தடுக்கும் நோக்கத்தில் அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆன்லைனில் மாற்றப்படுகின்றன.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் இருக்கிறது. அதே போல உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கடந்தாண்டு முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு அமலில் உள்ளது.

அதேபோல, தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் படி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்ற பிறகுதான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, அதிகபட்சம் எட்டு வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம் இல்லை.

அதேபோல உயரமில்லா கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது. அது மட்டும் இன்றி , 300 சதுரமீட்டர் வரையும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் கமர்ஷியல் கட்டிடங்களுக்கும் பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான், கடந்த பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி தேவையில்லை என்றும் பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்ற அறிவிப்பும் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

‘www.onlineppa.tn.gov.in’ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆன்லைனில் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை.

நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் முடிவுக்காக இருக்கிறோம் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; தேர்வு முறைகேட்டுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அமைப்பு ரீதியாக சிக்கல்கள் உள்ள நீட் தேர்வு முறையை எப்படி சரி செய்யப்போகிறீர்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார். பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர்.

இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர். தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என்று கூறினார்.

அரவக்குறிச்சி அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி

அரவக்குறிச்சி அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் சாலையோரம் மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் சூளை ஜி.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(42). இவர் தனது தனது மனைவி மோகனா (40 ), மாமியார் இந்திராணி( 67) மற்றும் மகள் வருணா(10 ), மகன் சுதர்சன் ( 15), ஆகியோருடன் கடந்த 20ஆம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு திங்கட்கிழமை அதிகாலை ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை கிருஷ்ணகுமார் ஓட்டி வந்தார். கார் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் அதிகாலை 3.30மணியளவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கிருஷ்ண குமாரும் அவரது மகள் வருணா மற்றும் அவரது மாமியார் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் கிருஷ்ண குமாரின் மனைவி மோகனா மற்றும் மகன் சுதர்சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மோகனா மற்றும் சுதர்சன் ஆகியோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது நடந்த இந்த கோர விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி: ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: பணமிருந்தால் தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்க முடியும் என்றும், இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.

மக்களவை இன்று காலை கூடியதும், நீட் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார். பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என மக்களவையில் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.

நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை உள்ளன என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.

ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!

ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!

ஏர்டெல் கஸ்டமர்களில் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை மட்டும் எதிர்பார்க்கும் நபர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.167 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் களமிறங்கி இருக்கிறது.

அதேபோல 28 நாட்கள், 30 நாட்கள், 77 நாட்கள், 84 நாட்கள் என்று மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் திட்டங்கள் வருகின்றன. முற்றிலும் டேட்டாவே கிடையாது என்றும் சொல்ல முடியாது, தேவைக்கேற்ப டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்த விவரம் இதோ.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொண்ட பேசிக் திட்டமாகும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் பெற்று கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில், 28 நாட்களுக்கும் சேர்த்து 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகைகள் வருகின்றன. நாளுக்கு ரூ.7 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் 3 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக ரூ.5 மதிப்பில் டாக்டைம் மற்றும் விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 600 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. அதேபோல 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 509 திட்ட விவரங்கள் (Airtel Rs 509 Plan Details): இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இதுபோக 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். மாதத்துக்கு ரூ.170 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் இல்லாத சலுகைகளே கிடையாது. டேட்டாவை தவிர மற்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. அதேபோல சிம் ஆக்டிவாக இருக்கும்.

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். மொத்தமாக 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே ப்ரீ போஸ்ட் டேட்டா சலுகை இதிலும் கிடையாது. அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. மாதத்துக்கு ரூ.167 செலவில் கிடைக்கிறது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES