டெல்லி : நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும்வரை தாம் ஓயப்போவதிலை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமது சமூக வலைதள பதிவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பது தமக்கு வெறும் பதவி மட்டும் அல்ல என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு தரப்பினரை சந்தித்தது உள்ளிட்ட காட்சி பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். மக்களவையில் உறுப்பினராக பதவியேற்றது இம்மாதம் 1ம் தேதி அவையில் பேசியது உள்ளிட்ட காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. மக்கள் பிரச்சனைகளை அறிந்து நாடாளுமன்றத்தில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் குரல் எழுப்புவதே தமது கடமை என்று அந்த பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மக்கள் தங்களுக்கான உரிமைகளையும் நீதியையும் பெறும் வரை தாம் ஓயப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடியது, உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தது, இந்திய ரயில்வே எஞ்சின் ஓட்டுநர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தியது. மணிப்பூர் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது ஆகிய காட்சிகளையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மின்சார வாரிய துறையின் நிதி நிலையும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம்.
இந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தனது நிதி நிலையை மேம்படுத்தும், நிதி ஆதாரங்களைச் சிறப்பாக பயன்படுத்தும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் முக்கியமான முடிவை சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது.இதன் படி Tangedco அமைப்பைத் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் – Tamil Nadu Power Generation Corporation Limited (TNPGCL) மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் – Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) என இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.Tangedco அமைப்பை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் ஒரு நிறுவனத்தை அனல் மின் உற்பத்தியிலும் மற்றொன்று விநியோகத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்து முடியும். இதன் மூலம் வருமானம், கடன் ஆகியவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் என்பது தமிழ்நாடு அரசின் திட்டம். இந்த நிறுவன பிரிப்பு மூலம் மின்சாரத் துறையில் நிதி நிலையை மேம்படுத்தவும் பெரிய அளவில் உதவும்.Tangedco அமைப்பை 2 பிரிவுகளாகப் பிரிக்கத் தமிழ்நாடு சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்த நிலையில், இந்த புதிய கட்டமைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவிற்கும், வளர்ந்து வரும் தொழிற்சந்தைக்கு மத்தியில் நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்த இது அவசியமாகும்.இதேபோல் இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதைப் பசுமை எரிசக்தியில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு கூடுதலாகத் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (Tamil Nadu Green Energy Corporation Limited) என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.இந்த நிறுவனத்தை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன் (TNEDA) இணைக்கப்பட்டுள்ளது என எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் ஜனவரி 24 அன்று வெளியிட்ட உத்தரவின்படி வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இந்த நிறுவனத்தின் வாயிலாக நீர் மின் உற்பத்தி, சோலார், காற்றாலை போன்ற பசுமை மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீடுகளையும் ஈர்க்க முடியும்.தமிழ்நாடு அரசின் Tangedco கடனைக் குறைப்பதற்கும், அதன் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் இரண்டாக உடைக்கும் ஆலோசனையை 2023ல் முன்னணி ஆலோசனை நிறுவனமான EY இந்தியா வழங்கியது. இதன் அடிப்படையில் பல பிரிவுகளில் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் இது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களே பிஎஸ்என்எல் திட்டங்களை (BSNL Plan) பார்த்து மூக்கில் விரல் வைத்து வரும் நேரத்தில், மாதத்துக்கு வெறும் ரூ.79 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுப்பது மட்டுமல்லாமல், 300 நாட்களுக்கு வேலிடிட்டியையும் கொடுத்து பிஎஸ்என்எல் தட்டித்தூக்கி இருக்கிறது.
இவ்வளவு மலிவான விலையில் எப்படி சலுகைகள் கிடைக்கிறது? வேலிடிட்டி முழுவதும் டேட்டா சலுகை கிடைக்குமா? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் கட்டணங்கள் உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதிக கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். ஏனென்றால், அவ்வளவு மலிவான விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்கும் விலையில் இருந்து கிட்டத்தட்ட பாதி விலைக்கு கூட பிஎஸ்என்எல்லில் திட்டங்கள் இருக்கின்றன. இதில் ரூ 797 மதிப்பிலான திட்டம் மிரள விட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வருடாந்திர திட்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், 300 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 10 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற முக்கிய சலுகைகள் வருகின்றன.
இருப்பினும், அதிகப்படியான சலுகைகளை பெற்று கொள்ள முடியாது. விலைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, இந்த ப்ரீபெய்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கொடுக்கப்படுகிறது.
டேட்டாவை பொறுத்தவரையில், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 120 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.
மொத்தமாக 6000 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஆகவே, முக்கியமான மூன்று சலுகைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், மேற்கூறிய மூன்று சலுகைகளும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கஸ்டமர்களுக்கு வழங்கப்படும். இந்த 60 நாட்களுக்கு பிறகு 300 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். அதாவது, தொடர்ந்து சிம் ஆக்டிவாக இருக்கும். இருப்பினும், வேறு சலுகைகள் கிடைக்காது.
இந்த 60 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தும் சலுகைகளுக்கு கட்டணங்களும் இருக்கின்றன. அதாவது, லோக்கல் கால்களுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாயும், எஸ்டிடி கால்களுக்கு 1.5 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். டேட்டாவை பொறுத்தவரை 1 எம்பிக்கு 25 பைசா வீதம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும். லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா வசூலிக்கப்படும்.
அதேபோல நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 1.20 ரூபாயும், இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 6 ரூபாயும் கட்டணமாக இருக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் மற்றும் இன்கம்மிங் கால் வருடம் முழுவதும் வர வேண்டும், இதற்கேற்ப திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் மற்ற நிறுவனங்களைவிட இது மலிவான விலைதான்.
காமராசர் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தின்விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். இவரது பெற்றோர் இவருக்கு குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்ற பெயரை இட்டனர்.இவரது பெற்றோர் இவரை ராசா என்று அழைத்தனர். இந்த இரு பெயர்களின் இணைப்பே பின்னர் காமராசா என மாறியது.காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கை இருந்தார்.[4]
ஐந்து வயதில், காமராசர் உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவரின் தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவரது தாயார் குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.பழங்கால தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டார், மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து முருகன் வழிபாட்டில் நேரத்தைச் செலவிட்டார்.
சென்னை: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற உள்ளது.
இதற்கான உத்தரவு விரைவில் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியானது. நாணையத்தின் ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என அச்சிடப்பட்டும், மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்பி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி செய்கின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் முனைப்பாக உள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அரசியல் செயல் திட்டமாக உள்ளது.
கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு மோசடியில் தொடர்புடையவர்கள் பாஜக-வில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். ஆகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை- ஆருத்ரா- பாஜக என்ற முக்கோணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கருணாநிதி குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க சதி நடக்கிறது. நீட் முறைகேட்டை மூடி மறைக்க பாஜக முயல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட ஒரு அரசியல் செயல்த்ட்டம் இருக்க வாய்ப்புள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த உடனே பகுஜன் சமாஜ் கட்சி கேட்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக கேட்டது. தமிழ்நாட்டில் எப்படியாவது பதற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டுகிறது” என்றார்.
என் மீது தெரிவிக்கும் விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் இன்று நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் என்றும் குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தனி நபர்களை தாக்கி பேசுவது தற்போது தொடங்கி இருப்பதாகவும், தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார். அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி: தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்கள் போல் தற்போது தமிழ்நாட்டிலும் தனிநபர்களை பா.ஜ.க.வினர் தாக்கி பேச தொடங்கியதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறையில் ஆய்வாளருக்கு பதிலாக, துணை காவல் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஐஜி அந்துஸ்து உள்ள அலுவலர்களை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும்.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது. அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லி: ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி. ஒன்றிய அமைச்சராகவும் அவர் இருந்து வந்தார்.
ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிதி இரானி தோல்வி அடைந்தார். புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஸ்மிருதி இரானி இந்த வார தொடக்கத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்தார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது;
வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.
ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவராக இருந்தாலும் இது பொருந்தும் என அவர் அறிவுத்தியுள்ளார்.
மக்களை அவமானப்படுத்துவதும், அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.