முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு, மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக அதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையிலும், தொழிற்சங்க மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் ப.தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும், ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப், பூக்கடை கண்ணன், கே.ஆர்.சுரேஷ்பாபு, வீரவாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் போஸ் இளைஞரணி குருபிரசாத், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், மூவேந்திரன், பகுதி தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், கோபிநாத், வார்டு தலைவர்கள் குமரகுரு, மொக்கச்சாமி, மணிவேல், பவர்.சிங்கம், ரவி, எஸ்.டி.கோபால், முருகேசன், பாலமுருகன், சரவணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிலம்பொலி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில சிலம்பாட்ட கழக தலைவர் வளசை முத்துராமன் ஜி முன்னிலை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், டிஜிட்டல் இந்தியாவின் படி தொடுவது கம்ப்யூட்டர் முறையில் பாயிண்ட் எடுக்கும் செயல்முறை எடுக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து சிலம்ப போட்டியிலும் இந்த கம்ப்யூட்டர் முறை நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சிலம்பொலி அறக்கட்டளை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் வரவேற்று பேசினார்.
இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யா.புதுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர் சசிகுமார் சர்க்கரை, ரவை, சேமியா, சம்பா கோதுமை, கோதுமைமாவு, ராகிமாவு,உருட்டு உளுந்து உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
இதில் முதியோர் இல்லம் டிரஸ்ட் நிறுவனர் ஜான் மில்டன், இல்ல மேலாளர் விஜயபாஸ்கர், பத்மா, எம்மால் இயன்றது நிறுவனர் கண்ணன், திருவள்ளுவர் நூலகம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொடங்குப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் இல்லாததால் ஏழை மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனம் இணைந்து ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை கோவில் வளாகத்தில் அளிக்க முன் வந்தனர்.
ஒரு மாதம் நடக்கவுள்ள இந்த கம்ப்யூட்டர் பயிற்சியின் தொடக்க விழாவை பொடங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா திருப்பதி தலைமையேற்று தொடங்கி வைத்து பேசுகையில், இந்த ஒரு மாத கம்ப்யூட்டர் பயிற்சியை மாணவ மாணவிகள் நன்றாக பயின்று கம்ப்யூட்டர் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பயிற்சியை அளிக்க வந்த நிர்வாகிகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.
பெட் கிராட் தொழில் பயிற்சி பள்ளி நிர்வாக இயக்குனர் ம.அ சுப்புராமன் துவக்க உரை நிகழ்த்தி பேசுகையில், உங்களை தேடி இந்த கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்க உள்ளோம். இந்த பயிற்சியை நன்றாக பயின்று சாதனையாளர்களாக நீங்கள் மாற வேண்டும் என பேசினார்.
இந்த பயிற்சியில் மொத்தம் 78 மாணவ மாணவிகள் (53 மாணவிகளும் 25 மாணவர்களும்) தனித்தனியாக இரண்டு பிரிவாக பயிற்சி பெற வந்துள்ளார்கள்.
இந்த அருமையான திட்டத்தை குறித்து ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் சி.எஸ்.ஆர் அலுவலர் D.சுஜின் பேசுகையில், ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் சார்பாக உங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்கள் சாதனையாளராக உருவாக வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியை கவனமாக பயின்று கம்ப்யூட்டர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஊர் நாட்டாமைகள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், பழனிவேல் கவுண்டர், கருத்தகண்ணன் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயகார்த்திகா நன்றி கூறினார்.
மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோவில் எதிரே உள்ள கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது. டாக்டர் என்.மாரி சிகிச்சை அளித்தார்.
இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இது குறித்து டாக்டர் என் மாரி கூறுகையில், கேசவ சேவா கேந்திரம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த அக்குபஞ்சர் முகாம் நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதமாக முற்றிலும் இலவசமாக சேவை செய்து வருகிறோம்..
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் இந்த முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு இந்த அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்த பொதுமக்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
மதுரையில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி,கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு மேற்கு 6-ஆம் பகுதி கழகத்தின் சார்பாக பகுதி செயலாளர் விளாங்குடி கே.ஆர்.சித்தன் ஏற்பாட்டில் நீர்,மோர்,தர்பூசணி பழங்கள் வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது.
வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, இளைஞரணி எஸ்.கண்ணன்,ஐ.டி விங் மாவட்ட துணைச் செயலாளர் கந்தன் மற்றும் கூடல்நகர் பிரேம்குமார், கார்த்தி, 20 வது வார்டு நிர்வாகிகள் முரளி, ஜெயசித்ரபாண்டி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிலம்புக்கலை, ஓவியப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
5-வயது முதல் 13-வயது வரை உள்ள குழந்தைகள் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் எனவும், பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில தலைவர் சரவணன் வழிகாட்டுதலின்படி மதுரையில் ஊடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர் ஆசிரியர் சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில், மாவட்டச் செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் துணைத் தலைவர்கள் சிவ கதிரவன், பாலா, இணைச் செயலாளர்கள் பிரேம், சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கார்த்திக், சுரேஷ் உறுப்பினர்கள் பிரபாகரன், சமய செல்வம், பழனிக்குமார், பாலா, ராஜ்குமார், சந்திரசேகரன் உள்ளிட்ட செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியில் பொருளாளர் கவிதா அனைவருக்கும் நன்றி கூறினார் மேலும் சிறப்பாக தங்கள் துறையில் களப்பணியாற்றிய சுகாதார உரிமைகள் மற்றும் ஆர்டிஐ ஆர்வலர் வெரோனிகா மேரி, அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தென்னவன், மதுரை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் கதிரியக்க இயற்பியல் துறை டாக்டர். செந்தில்குமார் மற்றும் செய்தியாளர்கள் எம்.எஸ்.பி.தம்பி, அழகர்சாமி, பழனிக்குமார் ஊடகச் செய்தியாளர்கள் கூடலிங்கம், சல்மான் பாரிஸ், பாலமுருகன், ராஜ்குமார், ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்து கௌரவிக்கப்பட்டது
முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அதிமுக செயல்வீரர் வி.பி.ஆர் செல்வகுமார் நீர் மோர் வழங்கினார்
தமிழகத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மக்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
மதுரையிலும் 100 டிகிரியையும் தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் காலை 11 மணியிலிருந்து 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் நீர்மோர் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கடுமையான கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் முன்பு மாநகர் அதிமுக செயல்வீரர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாஸ்.மணி, பாவலர் ராமச்சந்திரன், சின்னச்சாமி, மலர்விழி, இன்சூரன்ஸ் ராஜா, பிரித்திவிராஜ், கார்த்திக்,செல்வம் உள்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ ஆசியுடன், மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
அவருக்கு 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன், முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஜெயக்குமார் தேவர், வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, ஐ.டி விங் மாவட்ட துணைச் செயலாளர் கந்தன் மற்றும் பில்டர் கண்ணன், கூடல்நகர் பிரேம்குமார், கார்த்தி உள்பட அதிமுக நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தும் சால்வைகளை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.