திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், படப்பை ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் படப்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிறப்பாக பணியாற்றி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலதிட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
சிறப்பு மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன் அவர்கள், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி. சரஸ்வதி மனோகரன் அவர்கள், மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.இரா.ஐயப்பன் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
பழநி: ‘ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்’ என்று புகழாரம் சூட்டினார்.
தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேல்கோட்டத்தை, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்எல்ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது: கோயில்களை பார்த்துக்கொள்ள கூறி அறநிலையத்துறையை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார். அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் பழநியில் 58.77 ஏக்கர் நிலம் ரூ.58 கோடியில் கையகப்படுத்தப்பட உள்ளது.
அறுபடை வீடுகளிலும் ரூ.789 கோடியில் 251 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழநி முருகன் உட்பட 69 முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். கோயில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறையின் சாதனைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக வரலாறு மட்டுமின்றி ஆன்மிக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம் பெறும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து நடந்த விழாவில் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலர் பி.சந்திரமோகன் வரவேற்றார். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டை முன்னிட்டு காலை முதலே பதிவுசெய்த பங்கேற்பாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரண்டனர். கண்காட்சி அரங்கில் திருமுருகனின் ஓவிய காட்சியரங்கம், 3டி திரையரங்கம் மற்றும் விஆர் (விர்ச்சுவல் ரியலாலிட்டி) அரங்கம் மற்றும் ஆன்மிக நூல்களின் புத்தக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மாநாட்டிற்காக வந்துள்ள பக்தர்கள் டிஜிட்டல் திரையில் மாநாட்டு நிகழ்வுகளை கண்டு ரசித்த்து வருகின்றன. மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் ஃ வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.
அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் எனது தலைமையில் இன்று (22.8.2024) மாலை சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன்.
விழுப்புரம், கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம்.
விழாவில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் பேரியக்கத்தில் எனது முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., அவர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் திரு.டி.என்.முருகானந்தம் அவர்கள், திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மாவட்டத் தலைவர்கள் திரு.ஆர்.பி.ரமேஷ் அவர்கள், திரு.வி.சீனிவாசகுமார் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு.சிறுவை ராமமூர்த்தி அவர்கள், விழுப்புரம் நகரத்தலைவர் திரு.செல்வராஜ், கானை வட்டாரத்தலைவர் திரு காத்தவராயன் அவர்கள், மயிலம் வட்டாரத்தலைவர் திரு.காத்தவராயன் அவர்கள், விக்கிரவாண்டி நகரத்தலைவர் திரு.குமார் அவர்கள், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் நாளை மாலை 3 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க அழைக்கிறோம்.
இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி MP இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேற்று குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சியில் துவங்கிவைத்தார்கள்.
தேர்தல் காலம் போலவே பேரன்போடு வரவேற்ற எமது சகோதர சகோதரிகளுக்கும், தேர்தல் பணியில் இரவு,பகலாக உழைத்து வெற்றியைத் தேடித்தந்த இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட,வட்டார காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் .
அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் / வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்பார்கள்.
அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்குகளை உயர்த்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தில் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க செபி தலைவர் அதானியின் சகோதரருடன் தொழில் கூட்டாளியாக இருப்பது தான் காரணமாக உள்ளது. செபி தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்கு மோசடிக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய பங்கு சந்தை என்பது ரூபாய் 25 லட்சம் கோடி முதல் ரூபாய் 30 லட்சம் கோடி வரை சந்தை மதிப்பு கொண்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செபி அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பே அதானி நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு லாப நோக்கில் செயல்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டை தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலமாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலும், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் சமூக நீதிக்கு எதிராக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று நாட்டையே உலுக்கி வருகிற பங்குச் சந்தை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சாஸ்திரி பவனே திணறியது என்கிற வகையில் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சாமானிய மக்களுக்கும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உருவாக்கியவரும் நவீன இந்தியாவை உருவாக்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக
20 .8.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைவர் ராஜீவ் காந்தியின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் Re சேகர் சேர்மன் ஊடகப்பிரிவு பஞ்சாயத்து ராஜ் மாநில பொதுச் செயலாளர்கள் கோவிந்தன், புஷ்பராஜ், தொகுதி தலைவர்கள் சங்கர் பாபு, ஹேமாவதி செல்வம், திருநாராயணன், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பொன்னம்பலவாசன், பொதுச் செயலாளர் சத்தியசீலன் , மூர்த்தி பொதுச் செயலாளர் சேவாதல் துணைத் தலைவர் ஆறுமுகம், தொகுதி செயலாளர் முகிலன், மோகன் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.