Monday , November 24 2025
Breaking News
Home / செய்திகள் (page 41)

செய்திகள்

All News

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநாதம்பட்டி பூச்சோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.6 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர்.

விசாரணையில் ஜோலார் பேட்டையை சேர்ந்த பீடி தொழில் செய்து வரும் ஞானசேகரன் என்பதும் சேலத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு திரும்பி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட பணம் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோபி அருகே நம்பியூர் சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

மலையம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் திருப்பூரில் பழைய கார்களை விற்பனை செய்த பணத்தை கொண்டு செல்லும் போது பிடிபட்டது தெரியவந்தது. சிவகங்கை இளையான் குடி சந்திப்பு சாலையில் அம்பேத்கர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த நிலையான கண்காணிப்பு குழுவினரிடம் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.83 பணம் சிக்கியது. கோவை மாவட்டம் பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை வியாபாரி கொண்டு சென்ற ரூ.76 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

விசாரணையில் சிங்காநல்லூரை சேர்ந்த அனிஷ் மற்றும் ஜேசுராஜ் என்பது தெரியவந்தது. திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இரு சக்கர வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர் இதே போல் ஆரணியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் உளுந்தூர் பேட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் அனுமதியின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 220 மதுபாட்டில்கள் சிக்கின. அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போதே காரில் இருந்த இருவர் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எவ்வித ஆவணங்கள் இன்றி லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 250 ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது.

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்…

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார். 23-ம் தேதி தஞ்சை, நாகை, 25-ல் குமரி, நெல்லை 26-ல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் கருத்தரங்கு கலையரங்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் 2023 மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் 2024 விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியில் டாக்டர் G. தமிழ்ச்செல்வி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் -குடிமக்கள் நுகர்வோர் மன்றம், வரவேற்புரை வழங்கினார்.

விழா தலைமை மற்றும் முதன்மை உறை கல்லூரி முதல்வர் டாக்டர். G. நிர்மலா வழங்கினார்.தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நல சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஃபெட்காட் மாநிலத் துணைத் தலைவருமான சு.இராசமோகன் முதன்மை உரை நிகழ்த்தினார்.

சிறப்புரை E.அன்பு எத்திராஜுலு இயக்குனர் -ஃபெட்காட் வழங்கினார். T.முருகன் அரசு வழக்கறிஞர் மற்றும் இயக்குனர் சட்டம் -ஃபெட்காட்,P. இராமகிருஷ்ணன் கடலூர் மாவட்ட செயலாளர்- ஃபெட்காட், K.திருமுருகன் இயக்குனர் (வேளாண் துறை) – ஃபெட்காட்,T.E.சித்ரகலா இயக்குனர் உணவு பாதுகாப்பு- ஃபெட்காட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


.

காங்கிரஸின் உத்தரவாதங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் உறுதி!

May be an image of 2 people

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் எங்களது 5 நியாயங்கள் மற்றும் 25 உத்தரவாதங்கள் உள்ளிட்ட கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மற்றும் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம், தொடர்ந்து கிராமம் கிராமம், தெருவுக்கு தெரு மக்கள் மத்தியில் சென்று ‘நாட்டின் குரல்’ கேட்டோம்.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாம் நெருக்கமாக அறிந்து புரிந்துகொண்டோம்.

அதனால்தான் எங்கள் அறிக்கை மற்றும் உத்தரவாதங்கள் வெறும் ஆவணங்கள் அல்ல, ஆனால் கோடிக்கணக்கான நாட்டு மக்களுடனான உரையாடலில் இருந்து பெறப்பட்ட ஒரு பாதை வரைபடமாகும்,

இது வேலைவாய்ப்பு புரட்சி மற்றும் அதிகாரம் பெற்ற பங்கேற்பு மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது.

5 நியாய உறுதிமொழியுடன் விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் சென்று மக்களின் வாழ்க்கை தொடர்பான உண்மைப் பிரச்சினைகளை நேரடியாகக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவோம்.

காங்கிரஸின் உத்தரவாதங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் உறுதி.

– மக்கள் தலைவர் திரு Rahul Gandhi

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை. வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடைகிறது.

சென்னையில் உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம்..!

உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம் சென்னையில் வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் 15 to 17-03-2024 தேதி வரை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக TAFISA தேசியத் தலைவர் SARAF இந்த நடுவர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நடுவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார்.

இதில் International Silambam Fedaration, Chairman சிவகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் டாக்டர் சுரேஷ் மற்றும் Technical Chairman ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 60 மேற்பட்ட நடுவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது .


மேலும் உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் முத்துராமன் ஜி அவர்களை நேரில் சந்தித்து உலக சிலம்ப விளையாட்டு போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

மேலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இருந்து வரக்கூடிய குழந்தைகளை தேர்வு செய்து இப்போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தனர்.
அவருடன் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் செயலாளர்கள் நடுவர் பெருமக்கள் பலர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா நிகழ்வில்….

Image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., மற்றும் திரு. இ.எம். சுதர்சன நாச்சியப்பன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், எம்.பி., டாக்டர் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு. இ. எர்ணஸ்ட் பால் தொகுப்புரை நன்றியுரை நிகழ்த்தினர். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES