Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 42)

செய்திகள்

All News

இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து…

இன்று இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். நகர தலைவர் முத்துவிஜயன் , நகர கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், நகர கவுன்சிலர் மகாலட்சுமி மாசிலாமணி, நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலதண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் கலந்து கொண்ட அத்தனை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நன்றி என்று பழனி K.குணசேகரன் முன்னால் காங்கிரஸ் தொழிற்சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.

மதுரை மத்திய சிறையில் ஆண், மற்றும் பெண் சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!

மதுரை மத்திய சிறையில் நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன்,சாஜர் அறக்கட்டளை சார்பாக ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் 30 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன், சாஜர் அறக்கட்டளை சார்பாக 30 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

அதன் துவக்க நாளான நேற்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் மற்றும் சாஜர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சக்திபாலன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

கே.ஆர்.எஸ் மருத்துவமனை H.R.திவ்யா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் சாஜர் டிரஸ்ட் சி.இ.ஓ ஆர்.நசீம்பானு நன்றி கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறை சிறைவாசிகள், தலா 25 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

இதில் சிறுதானிய சத்துமாவு, கஞ்சி மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், அடை தோசை, மிக்ஸ், பணியாரம் மிக்ஸ், குதிரைவாலி சேவ், ஜிலேபி, குலோப் ஜாமூன், திணை அதிரசம்,வரகு அரிசி முறுக்கு, கவுனி அரிசி அல்வா, கட்லெட் ஆகியவை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சியின் போது சிறுதானிய மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் உணவு வகைகள் ஆகியவை தயார் செய்யும் முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

திருச்சியில் மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது.

இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு தேர்தலுக்கு 17 நாள்கள் மட்டுமே உள்ளன.மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

இதனை கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான திருவாரூரில் 23-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.

பின்னர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.

தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..!

தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..!

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார்.திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .

விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் அவர் இருந்த கார் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் தவித்துள்ளது. அதன் உள்ளே இருந்த விஜயும் இதனால் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் வந்த கார் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி நொறுங்கியுள்ளது. காரின் பின்பகுதி முன் பகுதி என பல இடங்களிலும் சேதம் அடைந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மதுரை மாவட்டம் பரவையில்ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் பரவையில்
ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது

மதுரை மார்ச்.18-

மதுரை பரவையில் ஏபிடி குழுமத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் உதிரி பாகங்கள் விற்பனை, சர்வீஸ் வசதிகளுடன் கூடிய புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராஜ்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜாத் ரஹ்மான், தலைவர், மதுரை லாரி உரிமைய்ளர்கள் சங்க தலைவர் சாத்தையா, மதுரை டூரிஸ்ட் கேப் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமநாதன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


திறப்பு விழா குறித்து ஏபிடி மோட்டார்ஸ் லிமிடெட் இயக்குநர் நடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சக்தி குழுமம் 100 ஆண்டுகள் பழமையான ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகும். அதன் பங்களிப்புடன் ஏ.பி.டி. நிறுவனம் கனரக வாகனங்கள் விற்பனை, சேவை, உதிரிபாகங்கள் போன்ற பல்வேறு வணிகங்களைக் கையாளும் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது.
இப்போது நாங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம்.
ஏ.பி.டி. மோட்டார்ஸ் அனைத்து மல்டிபிராண்ட் வாகனங்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மதுரை மாவட்டம் பரவையில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.


அதன்படி அனைத்து மல்டிபிராண்ட் கனரக வாகனங்களுக்கான சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.6 வாகனங்களும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படும் அனைத்து சென்சார்கள் மற்றும் சில்லுகளைப் புரிந்துகொள்ள சமீபத்திய மென்பொருளின் உதவியுடன் மட்டுமே முழுமையாக கண்டறியப்படுகின்றன.


எல்லா நேரங்களிலும் உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அனைத்து உதிரி சப்ளையர்களுடனும் நாங்கள் கைகோர்த்துள்ளோம். பாடி பில்டிங், சேவைகள், உதிரிபாகங்கள், நிதி, காப்பீடு, எப்.சி.மற்றும் ஆர்.டி.ஓ. தொடர்பான பிற வேலைகளை பாஸ்ட் டேக்குகளில் சேர்த்துக் கொள்வதால் இச்சேவை கிடைக்கிறது. பேருந்து உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பலர் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்.


வருங்காலத்தில் அனைத்து சாலையோரப் பணிமனைகள் மற்றும் மெக்கானிக்குகள் தங்கள் வணிகத்தை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும், எனவே அவர்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும், மேலும் ABT TN இன் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது ஏபிடி இண்டஸ்ட்ரீஸ் பொது மேலாளர்
உதய சந்திரன், துணை பொது மேலாளர் வசந்த் குமார், மற்றும் சக்தி பைனான்ஸ் விவேக் கிருஷ்ணன் உடனிருந்தனர்.

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அரசரடியில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநில துணைத்தலைவர் ஆசிரியர் மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் ராஜ்குமார், சாதனை படைத்தவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

அரசு வழக்கறிஞர் கணேஷ்பாபு புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரும்,மாநில கண்காணிப்பாளருமான ஆர்.ராமன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட தலைவர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் களமாட போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? உத்தேச பட்டியல் இதோ.!!

தமிழ்நாட்டில் களமாட போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? உத்தேச பட்டியல் இதோ.!!

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கையெழுத்து உள்ளனர்.

இத்தகைய சூழலில் இந்த பத்து தொகுதிகளில் களமிறங்க போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் கடலூர், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய மூன்று தொகுதிகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

மாறாக தேனி, திருச்சி, ஆரணி ஆகிய தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. இருப்பினும் கடந்த முறை காங்கிரஸ் கட்சியில் களமிறக்கப்பட்ட அதை வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சி சில மாற்றங்களை கொண்டு வந்து புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஐ.டி பிரிவு ஆலோசகர் சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

அதேபோன்று கடலூர் தொகுதியில் கே‌.எஸ் அழகிரியும், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரமும், கிருஷ்ணகிரி தொகுதியில் செல்வகுமாரும், கரூர் தொகுதியில் ஜோதி மணியும், விருதுநகரில் மாணிக்கத்தாகூரும், கன்னியாகுமரியில் விஜய் வசந்தம் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் பிரவீன் சக்கரவர்த்தி திருநாவுக்கரசர் அல்லது சுரண்யா ஐயர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் வைத்தியலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

``பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!" - ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உட்பட தலைவர்கள் பேசினர்.

இதில் முதலில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ராகுல் காந்திரையை சகோதரர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை இப்போது மும்பையில் முடிந்து இருந்தாலும் அது விரைவில் டெல்லியை அடையும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ”ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு பா.ஜ.க அரசு பல இடையூறுகளை கொடுத்தது. குறிப்பாக சில சிறிய காரணங்களைக்கூறி அனுமதிகளை மறுத்தனர். அப்படி இருந்தும் அத்தடைகளை தாண்டி ராகுல் காந்தி திறமையுடன் தனது யாத்திரையை தொடர்ந்தார்.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து பா.ஜ.க அரசுக்கு தூக்கம் போய்விட்டது. ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்தார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் அதனை தோற்கடித்து பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்தார். அதனால் பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்துள்ளார். பா.ஜ.க அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது. விரைவில் பா.ஜ.க தூக்கி வீசப்படும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு ஆண்டில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது மற்றும் போலி பிரசாரம் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தார்.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் பா.ஜ.க தான் ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. பா.ஜ.க மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல். மோடி இந்த ஊழலை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி நமது ஒரே குறிக்கோள் பா.ஜ.க வை தோற்கடிப்பதாகத்தான் இருக்கவேண்டும். பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் உண்மையான வெற்றி பா.ஜ.க வை மக்களவை தேர்தலில் தோற்கடிப்பதில்தான் இருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பயணம் டெல்லியை பிடிப்பதில் முடிவடையவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ”மகாத்மா காந்தி தனது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மும்பையில்தான் தொடங்கினார். ராகுல் காந்தி மும்பையில் தனது யாத்திரையை முடித்து இருப்பதற்கு நன்றி. பா.ஜ.க ஒரு பலூன். அந்த பலூனை ஊதிவிட்டோம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கூறுகிறார்கள். 400 நாற்காலிகள் கிடைக்க அவர்கள் என்ன பர்னீச்சர் கடையா வைத்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கூடிய போது எங்களை எதிர்ப்பாளர்கள் என்றார். ஆம் நாங்கள் எதிர்ப்பாளர்கள்தான். சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள். மோடி குடும்பம் என்பது அவரும் அவரது நாற்காலியும்தான். அவர்கள் என்ன காரணத்திற்காக 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் சொல்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

நாங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க இங்கு கூடியிருக்கிறோம். ரஷ்யாவில் தேர்தல் நடக்கிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கிடையாது. ஒரு சம்பிரதாயத்திற்கு தேர்தல் நடக்கிறது. எனவே இந்த முறை பா.ஜ.க வெளியேற்றப்படவேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கிறேன். மும்பையில் நாம் எதாவது சொன்னால் அதனை ஒட்டுமொத்த இந்தியாவும் கேட்கும்” என்றார்.

சரத் பவார் பேசுகையில்,” விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்களுக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் கமிஷன் அவர்களின் உத்தரவாதத்திற்கு தடை விதித்துவிட்டது. மகாத்மா காந்தி மும்பையில் இருந்துதான் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். அதே போன்று இது பா.ஜ.க வே வெளியேறு என்று சொல்லும் நேரம்” என்று தெரிவித்தார்.

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ரூ.80 சரிந்து காணப்பட்ட நிலையில், இன்று கொஞ்சம் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 48,920 ஆயிரத்துக்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6,115க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.30க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES