மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் பேரையூர் தாலுகா தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்வின் போது விவசாயத்தை தரமான விதைகளை கொண்டு முறையாக விவசாயம் செய்வோம். தீய பழக்கங்களான மது போதைக்கு அடிமையாக மாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் துரைபாஸ்கர், மேற்கு மாவட்ட தலைவர் சி.ரத்தினசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை புதூர் பேருந்து நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க. செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் மாநகர், கிழக்கு, மேற்கு விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி
மதுரை,டிச.27-
இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுழற்றும் உலக சாதனை முயற்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இந்திய சிலம்பம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரா.சரவணபாண்டி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் ஜெயபாலன் மற்றும் சமூக சேவகர் பாலாஜி வானவில் பைன் ஆர்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்கள்.
இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில துணைத்தலைவர் சோலைமலை மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக 12 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
முன்னதாக அன்று காலை சிறப்பு தீபராதனை,பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குருநாதர் மலைராஜன், சுந்தரமகாலிங்கம், ஆர்.சி.மணிகண்டன், மருதுபாண்டியன், பி.கே.ராஜா, வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், மன்னாதிமன்னன் மற்றும் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று போல் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ம. அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மணிவேல் அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி மாநகர் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் பொறுப்பாளர்கள், கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள், மகளிரணியிணர், காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்கதன் என அனைவரின் சார்பாகவும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம. அண்ணாதுரை மாநில ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் சேர்க்கை ராஜுவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழக காங்கிரஸ் கமிட்டி.
வீரமங்கை வேலுநாச்சியாரின் 227-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சக்திவேல் பாண்டியன், களஞ்சியம் முருகன், தத்தனேரி கார்த்திக், சேதுபதி, நிர்மல்குமார், பாலா உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடக்க உள்ள மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை கண்மாய்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் :- வரும் ஜனவரி 07 ஆம் தேதி அன்று நமது கட்சி சார்பாக மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.என பேசினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.மாரிமறவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் நாட்டார் முத்தையா பங்கேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் பி.எம்.திருமுருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளபட்டி காங்கிரஸ் கமிட்டியின் சிபாரிசின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 21 லட்ச ரூபாய் செலவில், பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் திரு அண்ணம்பாரி ஜக்கரியா, பள்ளப்பட்டி நகர தலைவர் திரு.அன்சார் அலி, பள்ளப்பட்டி பாப்புலர் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி & தமுமுக மாவட்டத் தலைவர் திரு சாகுல் ஹமீது, அரவக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டியின் வட்டார தலைவர் திரு.காந்தி, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் அவர்களின் மகன் தமிழ்மணி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு.க.முகமது அலி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.க.பாலமுருகன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. சாகுல் அமீத், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் அப்துல் காதர், திரு.சுகைப், திரு.சாதிக் ஹாஜியார், பள்ளப்பட்டி நகராட்சி 16வது உறுப்பினர் சம்ரானா, அரவக்குறிச்சி பாதிரியார் மகேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பள்ளப்பட்டி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தி, இளம் தலைவி திருமதி பிரியங்கா காந்தி, இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பேராசியுடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்சுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் நல்ஆசியுடன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ.ஜோதிமணி அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் அரவக்குறிச்சி பேரூராட்சி 9-வது உறுப்பினர் திருமதி பஜிலாபானு அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் வண்ணம், இன்று 21.12.2023 வியாழக் கிழமை அரவக்குறிச்சி முருகன் கோவில் முன்பு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் திரு.PR. இளங்கோ அவர்கள் , பூமி பூஜையுடன் பணிகளை துவக்கி வைத்தார்.
முன்னிலை: அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.N. மணிகண்டன் அவர்கள் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் திரு.தங்கராஜ் அவர்கள் , அரவக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் திரு.B.S. மணி அவர்கள், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.ஆனந்தன் அவர்கள் ,
உடன்: பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி: பார்லிமென்ட் மக்களவையில் கடந்த 13-ம் தேதி கண்காணிப்பு தளத்தில் இருந்து 2 பேர் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அகில இந்திய எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது.ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியதாவது:-
பார்லிமென்ட் வரலாற்றில், இது நம்ப முடியாத செயல்.இது ஜனநாயகத்திற்கு அடியாகும்.பாராளுமன்றத்தில் உண்மையாக செயற்படுவது அமைச்சர்களின் மிக முக்கியமான பொறுப்பு.நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லாத சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சபைக்கு வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
ஆனால், இதைப் பற்றி விவாதிக்க அரசு விரும்பவில்லை.ஆளும் கட்சியினர் தங்கள் இஷ்டப்படி நடக்க நினைக்கிறார்கள்.சசிதரூர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “எதிர்ப்பு தெரிவித்து சர்வாதிகாரியாக செயல்படும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய ஆளுங்கட்சி விரும்புகிறது. ஜனநாயகத்தில் இது சாத்தியமில்லை. அதனால்தான் மக்களிடம் செல்கிறோம். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு விளக்கம் அளிக்கும் வரைசபையில் கொடுக்கப்பட்டால், எங்கள் போராட்டம் தொடரும்.
எனது கடிதத்திற்கு துணை ஜனாதிபதியின் பதிலுக்காக காத்திருக்கிறேன்,” என்றார்.அகில இந்திய எம்.பி.,க்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
பார்லிமென்டில் நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்த, உள்துறை செயலருக்கு, சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரல் மேற்பார்வையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவை சுமுகமாக நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.பார்லிமென்ட் அத்துமீறலுக்கு வேலையில்லா பிரச்னையே காரணம் என ராகுல் கூறுகிறார்.எனவே இதை ராகுல் ஆதரிக்கிறாரா?இது ஒரு பொறுப்பற்ற கருத்து.அவர்கள் அனைத்தையும் அரசியலாக்க விரும்புகிறார்கள்.இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.