Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 55)

செய்திகள்

All News

சினிமா பாணி சேஸிங்; 35 கி.மீ துரத்திய நாகை எஸ்.பி – திருவாரூரில் சிக்கிய கரூர் கொள்ளையர்கள்!

சினிமா பாணி சேஸிங்; 35 கி.மீ துரத்திய நாகை எஸ்.பி - திருவாரூரில் சிக்கிய கரூர் கொள்ளையர்கள்!

கரூரில் மர்ம கும்பல் ஒன்று காரில் சென்றபடி, சாலையில் செல்வோரிடம் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவ தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸார் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்பி

இந்நிலையில் நாகப்பட்டினம் எஸ்.பி ஹர்ஷ்சிங் நாகை மாவட்ட போலீஸாரை உஷார் படுத்தியிருந்தார். காரில் வழிப்பறி செய்த கும்பல் குறித்து நாகை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கும்பல் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து எஸ்.பி ஹர்ஷ்சிங் தலைமையில் தனிப்படை போலீஸார், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் அதிவிரைவுப்படை உள்ளிட்ட போலீஸார் நான்கு பிரிவுகளாக பிரிந்து மர்மகும்பல் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதை மோப்பம் பிடித்த மர்ம கும்பல், டாடா சுமோ காரில் தப்பித்து சென்றனர். இதையடுத்து எஸ்.பி ஹர்ஷ் சிங், பக்கத்தும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கும், மாவட்ட எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்ததுடன் காரில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க காரில் விரட்டி சென்றார். பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம்

கொள்ளையர்கள் சற்றும் சளைக்காமல் எஸ்.பிக்கு போக்கு காட்டி சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங்கில் 35 கிலோ மீட்டர் எஸ்.பி ஹர்ஷ் சிங் தலைமையில் போலீஸார் விரட்டி சென்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவாரூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிக்கியவர்கள் மதுரையை சேர்ந்த கண்ணன் (23), பக்ருதீன் (33), பாண்டியன் (31), சிவகங்கையை சேர்ந்த அஸ்வின் (30), தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஸ் (33) ஆகிய ஐந்து பேர் எனவும் கரூரில் வழிப்பறியில் ஈடுப்பட்டதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் கும்பலாக காரில் சென்று பல மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கொள்ளை கும்பலிடம் திருவாரூர் மாவட்ட போலீஸார் விசாரணை முடிந்த பிறகு கரூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர். கார்

கரூரில் கொள்ளையடித்து விட்டு காரின் நம்பேர் பிளேட்டை மாற்றிக்கொண்டு வேளாங்கண்ணி வந்து தங்கி விட்டனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை ஃபாலோ செய்ததை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் காரில் தப்பி சென்ற போது காரில் விரட்டி சென்று பிடித்ததாகவும், கொள்ளைர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் நாகை போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். 35 கிலோ மீட்டர் விரட்டி சென்று கொள்ளையர்களை பிடித்த நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் டீமை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!

இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது.

2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

 தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் நடைபெறும் விவரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.

இந்த நிலையில் இன்று மாலை 3மணி அளவில் இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணிகளுக்குள் இணக்கம் ஏற்படவில்லை. மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள காங்கிரஸ் உடன்படவில்லை. இது காங்கிரஸின் பின்னடைவுக்கு வழிவகுத்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தட்டிப்பறிக்கவும், சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்கவும் விரும்பியதால் அங்கு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

ராஜஸ்தானைப் பொறுத்த வரை அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வழக்கம் இருந்தாலும், அசோக் கெலாட் அரசின் நலத்திட்டங்கள் இந்த வழக்கத்தை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் கட்சி நம்பியது.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் (அமைப்பு) செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் கட்சியின் மோசமான தேர்தல் செயல்பாடுகள் குறித்து மட்டும் ஆய்வு செய்திருந்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவராக ஜிது பட்வாரியையும், சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சரண் தாஸ் மஹந்த் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை நியமித்தார்.

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மீது புகார் மனு…

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பாஜக சமூக ஊடத்துறை மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள் என தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் திரு க. முகமது அலி, கரூர் மத்திய மாநகர துணை தலைவர் திரு.கண்ணப்பன் மற்றும் கரூர் கிழக்கு மாநகர தலைவர் திரு சண்முகசுந்தரம். மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை பொதுச் செயலாளர் திரு. சாகுல் அமீத், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு. ஷேக் அப்துல் காதர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை எல்லீஸ் நகர் அருகே போடி லைன் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை எல்லீஸ் நகர் அருகே உள்ள போடி லைன் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

13/12/2023 புதன்கிழமை அன்று கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

பின்னர் மறுநாள் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று வாழ்த்து

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது.

, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், முருகன், பழனியாண்டி, ஆர்.சி.மணிகண்டன் உள்பட தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது.

, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், முருகன், பழனியாண்டி, ஆர்.சி.மணிகண்டன் உள்பட தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் | 8 பேர் பணியிடை நீக்கம்!

நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் |  8 பேர் பணியிடை நீக்கம்!

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி புதிய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் புகை குப்பிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர், வண்ண புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்திய படி ‘பாரத் மாதாகி ஜெ’, ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘ஜெய் பீம்’, ‘ஜெய் பாரத்’ என்றவாறு கோஷமிட்டனர்.

அவர்களையும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரையும் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை மீறி 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

தேனி மாவட்டம் திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை, அறநல்லுலகம் பொதுநல அறக்கட்டளை தெப்பம்பட்டி இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு & சான்றிதழ் வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன், அழகர்சாமி,சர்க்கரை பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் சத்திய சீலா மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பரமன், வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஆசிரியர் சக்திவேல் வரவேற்று பேசினார். வனச்சரகர் அருள், உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை அமைப்பாளர் பசுமை செந்தில், முன்னாள் மாணவர்கள் கண்ணன்,அழகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் தோழர் ராமசாமி, முருக்கு பாண்டி, வெள்ளைச்சாமி, அழகர்ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தாக்குதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஜனநாயகத்தின் ஆலயத்தை காத்து உயிர் நீத்த இந்த தியாகிகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES