Saturday , July 5 2025
Breaking News
Home / இந்தியா / திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு…
MyHoster

திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு…

இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு பிச்சாண்டி பில்டிங் வருவாய் துறை அலுவலர் சங்கத்தில் திரு பி.பி நடராஜன் மாநில துணை அமைப்பாளர், ஐபிசி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வரவேற்புரை திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு. சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், பி.ஆர்.டி ராஜா அவர்கள் வரவேற்புடன் இனிதே நிகழ்ச்சி ஆரம்பித்தது.

முகமது மைதீன் மாநில செயலாளர் அவர்கள் சிறப்புரை மற்றும் பின்னர் விழா பேருரை ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்கள் ஆற்றினார்கள். திரு. பிரபு மாநில துணைத்தலைவர், திரு. செல்லப்பாண்டி மாநில துணைத்தலைவர், திரு. அன்பரசு மாநில அமைப்பாளர், திரு. துரைப்பாண்டி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. சந்திரசேகர பெருமாள் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. பாலமுருகன் ஐடி விங் மாநில செயலாளர், திரு. போஸ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அலெக்சாண்டர் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஜெயபிரகாஷ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. மலர் சின்னத்தம்பி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அருண்குமார் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஸ்டாலின் மேற்கு மாநில துணை செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் ஐபிசி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திரு. காதர் சுல்தான் கரூர் மாவட்ட துணைத் தலைவராக இம்மாநாட்டில் ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்களால்அறிவிக்கப்பட்டார்.

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES