Thursday , November 20 2025
Breaking News
Home / கரூர் / இணைந்து எழு கரூர் கூட்டம்…
MyHoster

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன் அவர்கள் ஒரு மனதாக ஏற்கப்பட்டார்.

கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இணைந்தெழு குழுக்களின் ஆலோசகராக ஏற்கப்பட்டார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக தி. ரமேஷ் ஆசிரியர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆதித்தமிழர் பேரவை சா .சுப்பிரமணி மாவட்ட நிதி செயலாளர் ஆதித்தமிழர் பேரவை மற்றும் துணை அமைப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் இணைந்து எழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மேரி லில்லி ஆகியோர் சென்னையில் இருந்து வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அன்பர்கள் பங்கேற்றனர்.

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES