
வாடிப்பட்டியில் இருந்து பால்குடம் எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சி.புதுார் கிராமத்திலிருந்து வந்த நிர்வாகிகள் அழகரடி மெஜூரா கோட்ஸ் அருகே உள்ள முத்துப்பிள்ளை சிலையிலிருந்து சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை வரை, மாநில மகளிரணி தலைவியும், தென்மண்டல அமைப்பாளருமான அன்னலட்சுமி சகிலா கணேசன் அவர்களின் ஆலோசனைப்படி, ஊர்வலமாக பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.
இதில் மதுரை மாவட்ட துனணத்தலைவர்
வைரமுத்து (எ) விஜயன் உள்பட
நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மனித விடியல்