Thursday , November 20 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
MyHoster

மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை அலுவலகத்தில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 222 வது ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், 116-வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நிறுவனத் தலைவர் டாக்டர் நா.சேதுராமன் அவர்களின் தலைமையில், பசும்பொன்னில் நடைபெற உள்ள பிரமாண்டமான அன்னதானத்தை, பசும்பொன்னுக்கு வருகை தர உள்ள தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க வேண்டும் என அழைப்பு விடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதில் மாநில பொதுச்செயலாளர் வி.டி.பாண்டியன், மாநில பொருளாளர் மணிவேல், மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி, பசும்பொன் கலை மன்றம் புரவலர் கோபாலகிருஷ்ணன், மாநில இணை பொதுச் செயலாளர் பிரபு, மாநில இளைஞரணி செயலாளர் பெரியதுரை, மாநிலத் துணைத் தலைவர்கள் தமிழரசன், தர்மராஜன்,பகவதி, தேவர் பேரவை வேலுச்சாமி, நாகராஜ் தேவர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES