Wednesday , July 30 2025
Breaking News
Home / செய்திகள் / காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.
MyHoster

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழகத் தலைவரும், முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலைச்சுடர் எஸ்.ஆர்.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஜி. முரளி கிருஷ்ணன் சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சீனிவாசன், செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சென்னகேசவலு, மற்றும் செல்வம், வெங்கடேசன், வேலு, காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசகர் மோகனரங்கன் மற்றும் எழுத்தாளர் பாலகிருஷ்ணன், கார்த்திக், திரவியன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES