Breaking News
Home / செய்திகள் / சாதனை படைத்த மாணவிக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் வாழ்த்து.!
MyHoster

சாதனை படைத்த மாணவிக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் வாழ்த்து.!

சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற 19-வது ஏசியன் ரோலர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ ஹர்ஷினி,3-வது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஜெகன், நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, சங்கரேஸ்வரி, பழனிவேல், பொன்.முருகன், முருகேசபாண்டி, முன்னாள் ராணுவ வீரர் ராமன், ஆறுமுகம், சாய்.கிருஷ்ணமூர்த்தி, மீடியா மாநில செயலாளர் கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES