Breaking News
Home / செய்திகள் / அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!
MyHoster

அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் தலைமையில்
39-வது ஆண்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு கள்ளழகர் வண்டியூருக்கு செல்லும் நாளான செவ்வாய்க்கிழமை அன்றும், மீண்டும் ராமராயர் மண்டகப்படியை நோக்கி செல்லும் நாளான புதன்கிழமை அன்றும் இரண்டு நாளாக புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம், பாயாசம், சுண்டல் பயறு, படாடாணி பயறு போன்ற பத்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாத்திரக்கடை நாகராஜ், குணா அலி, நாகேந்திரன், தர்மர், பூமிராஜா, அழகர், ரத்தினம், இ.பி.கண்ணன், மகேஷ்குமார், அம்மா கண்ணன், சேது, பரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES