7.6.2021 திங்கள் கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம் பெண்கள், ஆதரவு அற்றவர்கள் ஆகியோர்களுக்கு அரவக்குறிச்சி பாலா அறக்கட்டளையின் மூலம் 250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உணவு தயாரிக்க உதவிய பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேருயுவகேந்திரா) வை.க.முருகேசன் மற்றும் Dr. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கௌசிகன், தினகரன், பாலுசாமி, சதீஷ், பூபதி, பாலா, அருண், மற்றும் சேவை மனம் கொண்ட கார்த்திக், பாலமுருகன், மோகன், சுப்பிரமணி, பாலசுப்பிரமணி ஆகியோருக்கு பாலா அறக்கட்டளை (www.balatrust.in) சார்பாக நன்றிகளை அறக்கட்டளை செயலாளர் திரு பாலமுருகன் அவர்கள் தெரிவித்து கொண்டார்.
நன்கொடை அளித்த நல் உள்ளங்களுக்கும் பாலா அறக்கட்டளை சார்பாக மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
