Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 33)

செய்திகள்

All News

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

மதுரையில் ஜோ அந்திரியா இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவது குறித்தும், விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பதை பற்றியும், மேலும் விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம்(PSO),உலக மகளிர் கழகம்(IWO)
மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம்,தாயின் மடி அறக்கட்டளை, இணைந்து நடத்தின.

இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன் மற்றும் ராமகிருஷ்ணன்,பிரியா கிருஷ்ணன், ராணிமுத்து (IWO), பூபதி, முருகேஸ்வரி,இந்து,இளவரசன், பள்ளி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த அமைப்புகளின் சார்பாக ஒரு லட்சம் மரங்கள் நட்டு வளர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு தொழுகை.

ரமலான் பண்டிகையை யொட்டி மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் மத்தியில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் இம்மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் 30 நாள்கள் நோன்பு மேற்கொண்டு ரமலான் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மதுரையில் பள்ளிவாசல்களில் அதிகாலையிலிருந்து பெருநாளை முன்னிட்டு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்த பின்னர் கட்டித்தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட தலைவர் எஸ்.ஷேக் இப்ராஹிம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகம்மது கௌஸ், மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், ஐ.பி.பி மாவட்ட செயலாளர் அர்சத்புகாரி, மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள வள்ளலார் அன்னதான கூடத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் ஏழை,எளியோருக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர் அலெக்ஸ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக சேவகர் பாரதி சிவா, திமுக மதுரை தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் ஜெய்கணேஷ், இரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மதுரை கனகு, சமூக சேவகர் ஸ்ரீமான் சரவணன், ஜெயபால்,ஒளிப்பதிவாளர் பாண்டி இணை இயக்குனர் வைரம் மூத்த நடிகர் அழகப்பன்,உதவி இயக்குனர்கள் பிரபு, சாமி, துணை நடிகைகள் சியாமளா கௌரி, முனீஸ்வரி, பத்ரகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி..!

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.கே சேதுராமன் தலைமை வகித்தார். இலக்கிய இளந்தென்றல் தீபக் விழா பேருரையாற்றினார்.

இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் சென்றாய பெருமாள், வெலமநாயுடு மகாஜன சங்க மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ், ரங்கா பில்டர்ஸ் கமலக்கண்ணன், கோம்பைராம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் சுதாகரன், பராசக்தி கல்வி குழுமம் தாளாளர் ஜெகதீசன், டாக்டர் சிட்டிபாபு, எஸ்.என்.பி டெய்ரி மில்க் நிறுவனர் ராஜேந்திரபாபு, பேராசிரியர் கதலி நரசிங்கப் பெருமாள், தொழிலதிபர் வாலிபால் செந்தில்குமார், பொம்மை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் நாயுடு சேவா சங்க நிறுவனர் பி.கே சம்பத்குமார் நன்றி கூறினார்.

மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா..!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிரணியினர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு வினா-விடை புத்தகங்களை சங்கத்தலைவர் எவர்கிரீன் பாலமுருகன் மற்றும் செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், டி.எம்.நாயுடு, மதுரை சிங்கம், ரெங்கராஜ், கஜேந்திரன், ராஜாராம், முத்துகண்ணன், டெய்லர் ரங்கராஜ், பாபு, அழகர்ராமானுஜம் மற்றும் மகளிரணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக்குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம். புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் யுகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலரெங்காபுரத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் டி.எஸ்.கே ஞானேஸ்வரன் ஏற்பாட்டில் வாக்கு சேகரிப்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பாலரெங்காபுரம் மண்டல் 165 வது பூத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே.கே.ரவி, 165-வது பூத் கிளைத் தலைவர் எம்.ஏ.டி சேகரன் மற்றும் மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து,மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் வாக்கு சேகரித்தார்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்து, மதுரையில் இருந்து சென்ற மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் துறையூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்வில் அனுப்பானடி சங்கர், மாரிமுத்து, சேதுமாதவன், காளிமுத்து, கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் கடுமையான வெயிலில் மக்களை காக்கும் விதமாக நீர்,மோர் வழங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள்..!

பொதுமக்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் அனைவரும் 100% வாக்கினை பதிவு செய்ய வேண்டும், ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.கணேஷ், செயலாளர் ஆ.மாயகிருஷ்ணன், பொருளாளர் கவிதா, துணைத்தலைவர்கள் சிவ.கதிரவன், பாலா, இணைச்செயலாளர் சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி, வெங்கடேஷ், சுரேஷ், உறுப்பினர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நாள்தோறும் நடைபெறும் நற்பணிகளை வாழ்த்தி வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் ருக்மணி வாழ்த்துரை வழங்கினார்.

வள்ளலார் பயிற்சி பள்ளி ஆசிரியை சிவஜோதிகா புத்தகங்களின் பெருமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியை ரோகுபாண்டி தொகுத்து வழங்கினார்.

விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES