இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இது போன்ற முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவதற்கான முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வருமாறு ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இனி முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்க தேவையில்லை எனவும் upi மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் நேரம் என்பதால் பணப்பரிவர்த்தனை , கையில் ரொக்கமாக எடுத்து செல்லுதல் என தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலில் இருந்து வருகின்றன.
நமது வங்கிப் பணிகளை மாதத் தொடக்கத்திலேயே திட்டமிட்டு கொண்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம். பொதுமக்களின் வசதிக்காக ரிசர்வ் வங்கி முன்பே வரும் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்களை அறிவித்து விடுகிறது.
இந்தியா முழுவதும் தேர்தல் ஜூரம். பணப்பரிவர்த்தனை கைகளில் ரொக்கமாக கொண்டு செல்வது என அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குழுக்களாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனைகளை செய்து முடிக்கவும் வங்கி விடுமுறைகளை அறிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
1 ஏப்ரல் 2024 – மார்ச் 31 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் நிதியாண்டின் வங்கிக் கணக்குகள் முடிக்கப்படும். 5 ஏப்ரல் 2024: ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை. 7 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்ரல் 2024: குடி பத்வா/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு பேலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
10 ஏப்ரல் 2024: ஈத் பண்டிகை கொச்சி மற்றும் கேரளாவில் வங்கிகள் விடுமுறை 11 ஏப்ரல் 2024: ஈத் பண்டிகை நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை. 13 ஏப்ரல் 2024: 2 வது சனிக்கிழமை 14 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை 15 ஏப்ரல் 2024: ஹிமாச்சல் தினத்தையொட்டி கவுகாத்தி மற்றும் சிம்லா வங்கிகள் விடுமுறை
17 ஏப்ரல் 2024: ஸ்ரீராம நவமி அகமதாபாத், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. 20 ஏப்ரல் 2024: கரியா பூஜை அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை. 21 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை 27 ஏப்ரல் 2024: 4வது சனிக்கிழமை 28 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து
மதுரை, மார்ச்.30-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை, மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் மீர்பாஷா, பூக்கடை கண்ணன், கே ஆர் சுரேஷ் பாபு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி முத்துக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன் மற்றும் வார்டு தலைவர்கள் குமரகுரு, கோவிந்தராஜன், பகுதி தலைவர் சக்திவேல், சரவணராஜ், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை, மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் மீர்பாஷா, பூக்கடை கண்ணன், கே ஆர் சுரேஷ் பாபு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி முத்துக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன் மற்றும் வார்டு தலைவர்கள் குமரகுரு, கோவிந்தராஜன், பகுதி தலைவர் சக்திவேல், சரவணராஜ், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
டெல்லி : பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஒன்றிய அரசு.
பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை ஏறியுள்ளது. பாஜக ஆட்சியில் வாங்கிய கடன் என்ன நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது.? வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதா? விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டதா?. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டதா?. பொதுத்துறை வலுப்பெற்றதா அல்லது பலவீனமடைந்ததா?. பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா?.
இந்த பணம் எங்கே போனது? யாருக்காக செலவிடப்பட்டது? இதில் எவ்வளவு பணம் தள்ளுபடி செய்யப்பட்டது? பெரும் கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடிக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது? இப்போது புதிய கடன் வாங்க அரசு ஏன் தயாராகிறது, கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி போன்ற சுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாஜக அரசு பொது மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல், ஏன் மக்களை கடனில் மூழ்க செய்துள்ளது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
18ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. சுமார் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறும். அது போல் 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. 3ஆவது கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதியும் 4ஆம் கட்ட தேர்தல் மே 13 ஆம் தேதியும் 5ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும் 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இவற்றுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு கட்டங்களாக நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஸா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் இந்தியாவில் ஆட்சி கட்டிலில் அமர போவது பாஜக கூட்டணியா இல்லை காங்கிரஸ் கட்சியா என்பது தெரியவரும். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை டிவி, பத்திரிகை, ஊடகங்கள் என எதிலும் வெளியிடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதால் கருத்துக் கணிப்புகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு பகுதியில் வெளியாகும் கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தல் நடக்கும் மற்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேரடி ஒப்புதலோடு, நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், ஆந்திரா மாநில பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
ராஜபாளையம், மார்ச்.28
ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்படும்,அகத்தியர் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் அம்சவள்ளி,சமிக்சா,சுவாதிகா, மீனாட்சி,பிரதியுஷா,காவாயா,ஸ்ரீபாவனா,ஸ்ரீபார்கவி,விஜய்தர்ஷினி, லிங்கேஷ்,பவதாரிணி ஆகியோர் கலந்து கொண்டு இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க தலைமை ஆசான் மருதுபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
ராஜபாளையம், மார்ச்.28
ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்படும்,அகத்தியர் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் அம்சவள்ளி,சமிக்சா,சுவாதிகா, மீனாட்சி,பிரதியுஷா,காவாயா,ஸ்ரீபாவனா,ஸ்ரீபார்கவி,விஜய்தர்ஷினி, லிங்கேஷ்,பவதாரிணி ஆகியோர் கலந்து கொண்டு இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க தலைமை ஆசான் மருதுபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரை கனகு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும் ஏழை எளிய ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலார் அன்னதான கூடத்தின் நிறுவனர் பாரதி சிவா, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் மூத்த நடிகர் அப்பா பாலாஜி, ஸ்ரீமான் சரவணன், மீசை அழகப்பன், மீசை மனோகரன், குறும்பட இயக்குனர் ஜெ.விக்டர், தொடாதே திரைப்படத்தின் இயக்குனர் அலெக்ஸ், உதவி இயக்குனர் அலங்கை பிரபு, தயாரிப்பாளர் பத்திரகாளி மற்றும் நடிகர்,நடிகைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.