Sunday , November 23 2025
Breaking News
Home / செய்திகள் (page 45)

செய்திகள்

All News

சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று மில்லட் மகாராணி 2024 ல் பரிசை தட்டிச்சென்ற பெண்கள்..!

மதுரையில் சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனத்துடன் இணைந்து பெருங்குடி, திருநகர், மற்றும் சமயநல்லூர் ஆகிய கிராமங்களில் தலா 25 பெண்களை ஒருங்கிணைத்து (75 பெண்களுக்கு) சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளை நடத்தியது.

இந்த பயிற்சியில் பங்கேற்ற பெண்களிலிருந்து 17 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தினமலர் மற்றும் ஆசிர்வாத் நிறுவனம் இணைந்து நடத்திய மில்லட் மகாராணி 2024 ல் கலந்து கொண்டனர்.

இதில் சமயநல்லூர் கிராமத்தை சேர்ந்த மாலதி முதலாவது பரிசான பிரிட்ஜ், மூன்றாவது பரிசான மிக்ஸியை திருமதி முத்துமீனா ஆகியோர் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்றவர்களை ஜே.கே பென்னர் நிதி நிறுவனம் மற்றும் சாஜர் அறக்கட்டளை சார்பாக வாழ்த்தினர். கலந்து கொண்ட அனைவருக்கும் தினமலர் மற்றும் ஆசிர்வாத் சார்பாக பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியிடம் மதுரை காளவாசல் பாஜக மண்டல் தலைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்

மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜக மதுரை மாநகர் காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் மதுரை பெத்தானிய புரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு மதுரை எழுமலையை சேர்ந்த தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் அவரது துணைவியார் உமாராணி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் நன்றி கூறினார்.

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை கோரிப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை,பிப்.28

குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கப்படுகின்ற ராக்கெட் ஏவுதளத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்,மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென சாலைக்கு சென்ற மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் ரவிச்சந்திரன், மீர்பாஷா உள்பட மாநில,மாவட்ட, வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் ரிசர்வ் லைனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா 3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந் நாட்டின் பெயர்களைக் கூறி அடையாளம் காட்டிய அதேவேளை அந் நாடுகளுடைய தேசிய மொழிகளின் பெயர்களையும் ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்தார்.

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை‌ தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து காணொளிக் காட்சியூடாக கண்காணித்து உறுதி செய்தார் அந் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள்.

அதேவேளை, இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார் சோழன் நிறுவனத்தின் லண்டன் நாட்டிற்கான கிளையின் தலைவர் திருமதி. புஷ்பகலா வினோத்குமார். இந்த நிகழ்வில் குடிவரவு திணைக்கள மூத்த வழக்கறிஞரும் பெல்தம் தமிழ் சங்கத்தின் தலைவருமான பத்ரிநாத் பாலவெங்கடேசன்,
பெல்தம் தமிழ் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் வினோத்குமார்,
பெல்தம் தமிழ் சங்கத்தின் செயலாளர் ரங்கநாதன் ரகோத்தமன் மற்றும் பெல்தம் தமிழ் சங்கத்தின் துணைச் செயலாளர் பிரபாகரன் போன்றோர் பங்கேற்று சோழன் உலக சாதனை படைத்த சிறுமியை பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

உலக சாதனை படைத்த ஸ்ரீவித்யாவுக்கு நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தில் பலியான சுப்ரவன் சிங்குக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி சுப்ரவன் சிங்குக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் எம்.பி ராமன், 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், 58 கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் பொன் மணிகண்டன், மாடக்குளம் கண்மாய் பாசன தலைவர் மாரிச்சாமி மற்றும் செல்லப்பாண்டி, முத்துமீரான், கர்ணன், அருண் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

மதுரை,பிப்.25-

மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்டம் 77-வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கட்சி கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில நிர்வாக குழு உறுப்பினர் கே.முஹம்மது கவுஸ், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக்இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், ம.ம.க மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன் மமக மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 77 வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜாகிர்உசேன், பரக்கத்அலி, இஸ்மாயில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம்

பௌர்ணமியை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் நடந்து சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அதன் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி முத்துலட்சுமி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கருப்பசாமி ஆசிரியர், ஜெயராம் – சாந்தலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76- வது பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக 63 வது வட்டக்கழகத்தின் சார்பாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில், 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டக்கழக நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் பூக்கடை முருகன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை விளாங்குடியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது

மதுரை மாநகராட்சி வார்டு 1 புதுவிளாங்குடி நேருஜி மெயின் ரோட்டில் புதிதாக தார்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மீனாட்சி காபி பாரில் இருந்து பாலமுருகன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

பொதுமக்களே தாமாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான காலஅவகாசம் மாநகராட்சி சார்பாக ஏற்கனவே வழங்கியும், அகற்றாததால் ஜேசிபி புல்டோசர் மூலம் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது.

கூடல்புதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES