Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 77)

செய்திகள்

All News

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை.!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 38 மாவட்ட விநியோக வட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களை அடையாளப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக திருவண்ணாமலை வேங்கிக்கால் சமுதாயக் கூடத்தில் முதல் கட்டப் பட்டியல் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன் , ஏழுமலை, பாலா (எ)பாலச்சந்தர், சபீர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும் ஒப்பந்த ஊழியர்களிடம் இருந்து பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை, தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை, பாலச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழக மின்சார வாரியத்தில் மின் கம்பம் நடுதல், மின்சாதன பொருட்களை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1200 தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளது.

மேலும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிவோருக்கு மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள 380 ரூபாய் கூலியை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க உள்ளோம் எனக் கூறினார்.

மதுரையில் கமலஹாசன் நலம் பெற வேண்டி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சிறப்பு பூஜை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 117 மாவட்டச் செயலாளர்கள், 7 நிர்வாகக் குழு, 25 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசனுக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டது. வலியையும் பொருட்படுத்தாமல் ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதை அறிந்த மதுரை மாநகர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மேலமாசிவீதியில் உள்ள ஆலால சுந்தரவிநாயகர் ஆலயத்தில் கமலஹாசன் விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதில்
சமூக சேவகர் முத்துராமன், ஆசைத்தம்பி, சிவக்குமார்,
முனியசாமி, நம்மவர் செந்தில்,
வெங்கடேசன், பாஸ்கர்,
மாணிக்கராஜ்,
ராமலிங்கம்,
சண்முகம்,
தினேஷ்பாபு,
சீனிவாசன், பங்கேற்றனர்.

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக பாராட்டு.!

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக நிர்வாகிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வீராங்கனை ஜொ்லின் அனிகா. மாநில, தேசிய மற்றும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று 6 தங்க பதக்கங்களை பெற்ற அவர் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வானார்.


இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, அவனியாபுரத்தில் உள்ள வீராங்கனை ஜெர்லின் அனிகா இல்லத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் அவர்களின் தலைமையிலும், வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் முன்னிலையிலும், மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில இணைச் செயலாளர் டாக்டர் ஜெகநாதன், மாநில மகளிரணி துணைத்தலைவி குரு லட்சுமி கஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் முருகேசபாண்டி, சின்னச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மாணிக்கராஜ், ஒருங்கிணைந்த மகளிரணி மாவட்ட தலைவி சங்கரேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்முருகன், பழனிவேல், மணிகண்ட பிரபு, மாவட்ட ஆலோசகர்கள் ராமன், ஆறுமுகம், இணைச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருச்சியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியதேவன், மாநில போராட்ட குழு செயலாளராக நாகை காத்தையன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில கௌரவ பொதுச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியதேவன், மாநில போராட்ட குழு செயலாளராக நாகை காத்தையன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில கௌரவ பொதுச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை வடக்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேலிடம் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் ராஜேந்திரன், இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்டபிரபு, சுமதி, திவ்யபாரதி, ரூபி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக கட்சி மாநில தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்துக்கு மதுரையில் வரவேற்பு.!

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் டாக்டர் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக செல்லும் போது மதுரை மாவட்டம் சித்தம்பட்டி டோல்கேட்டில் இந்திய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ஞானசேகரன், கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆளுயர மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜான், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக சமூக சேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா.!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் சமூகசேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் வடக்கு மாவட்ட தலைவராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வி.பி.ஆர் செல்வகுமாருக்கு அங்கீகார சான்றிதழ் அடையாள அட்டை வழங்கி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் டாக்டர் ஜமாலூதீன், முஜிபூர்ரகுமான், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில இணைச் செயலாளர்கள் ரகுபதி,ஜெகநாதன்,மாநில ஆலோசகர் முன்னாள் டி.எஸ்.பி குசலவன், மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, மாநில செயலாளர் கீதா முருகன், மாநில மகளிரணி துணைத்தலைவி மருத்துவர் குருலட்சுமி கஜேந்திரன், மாவட்ட ஆலோசகர்கள் முன்னாள் ராணுவ வீரர் இராமன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர், நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ.எஸ்.மணியன் MLA., மற்றும் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் Ex MLA., ஆகியோர் அறிவுறுத்தலின்படி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.சிவக்குமார் தலைமையிலும் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எம்.நற்குணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ம.சக்தி, மாவட்டம் மீனவர் அணி செயலாளர் ஜி.நாகரத்தினம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்

நிகழ்வில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் முனைவர் மாதாணம் சத்தியமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர்கள் எம்.எஸ்.ராஜேந்திரன் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, மற்றும் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம் பாஸ்கரன், இனியன், வக்கீல் ரவி, பாலதண்டாயுதம், செந்தில்குமார், கருணாகரன், காட்டூர் வடிவேல், சந்திரசேகர் விக்னேஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நடைபெற உள்ள தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவிற்கான டிக்கெட்டை வி.பி.ஆரிடம் பன்னீர்செல்வம் வழங்கினார்.!

தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் “மதுரையை கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கான டிக்கெட்டை தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வக்குமார் அவர்களிடம் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட இணைச்செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டபிரபு, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கம் வடக்கு தொகுதி செயலாளர் ஜெயப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்…

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES