
திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது
மதுரை,செப்.07
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பிரனேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கிஷோர்குமார், ஆரபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் சித்ரா, துணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.