Sunday , June 1 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அக்கூட்டத்தொடரில் 150க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளனர். அந்த தீர்மானம் குறித்து எம்பிக்கள் கூறுவதாவது, “இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்ட ரீதியில் பறிப்பதற்காக இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது. இச்சட்டம் செயல்படத்தொடங்கினால் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர். குடியுரிமை என பெயரில் சர்வதேச கடமைகளை மீறி இச்சட்டத்தை இந்தியா கொண்டு வந்துள்ளது. இது பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணையம் முன்னதாகவே தெரிவித்தது. இந்தியா இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல், அடக்குமுறை குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த சட்டம் அமலாக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும். இதனை கண்டிக்கிறோம்” என கூறியுள்ளனர். ஆனால், ஐ.நாவின் இந்த தீர்மானங்கள் குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளது.

சர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்

Read More »

சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்ற நிலை மாற்றிய அரசு மருத்துவர்

அரியலூர் அரசு மருத்துவமனையில் கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து நோயாளிகள் குடும்பத்திற்கு ஒளி விளக்கு ஏற்றும் அற்புத மனிதர் மருத்துவ கொளஞ்சிநாதன் அவர்கள் . எனது தாயாருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று பல மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில் , நாங்கள் இருக்கிறேன் உங்கள் கண்களை சரி படுத்துகிறேன் என்று …

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மூலக்கடை என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த ராதாகிருஷ்ணனை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Read More »

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.

Read More »

பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்புரை

திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் …

Read More »

சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு

சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த குமரவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு நீதி நாளான இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு வருட காலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தப்பகுதி எந்த நேரமும் புளிதியோடு காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர், ஆகையால் …

Read More »

எனக்கு பில்டப்-லாம் வேணாம்..” என கூறிய நடிகர் விஜய் – மிரண்டு போன படக்குழு

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் 70% முதல் 80% வரை போட்ட பணத்தை எடுத்து விடலாம். இதனை மினிமம் கியாரண்டி என்று கூறுவார்கள். இதற்கு காரணம், நடிகர் விஜய்க்கு இளவட்டங்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் மற்றும் குழந்தை ரசிகர்களும் அதிகம். விஜய் நடிப்பு, படங்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய நடனதிற்கு என தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். …

Read More »

டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு

4 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு.. டெல்லி தென்கிழக்கு டிசிபி பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி. டெல்லி: டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இந்த …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES